தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவராத்திரி பூஜையை எப்போது தொடங்குவது?

Go down

நவராத்திரி பூஜையை எப்போது தொடங்குவது? Empty நவராத்திரி பூஜையை எப்போது தொடங்குவது?

Post  birundha Fri Apr 26, 2013 6:18 pm


நவராத்திரி பூஜை மற்றும் கொலு வைப்பதை 15-ந்தேதி மாலை தொடங்குவதா அல்லது 16-ந் தேதி தொடங்குவதா என்பதில் இந்த ஆண்டு சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக மகாளய அமாவாசைக்கு மறுநாள் நவராத்திரி பூஜை தொடங்க வேண்டும் என்பது மரபாக உள்ளது. அப்படி பார்த்தால் 16-ந்தேதி தொடங்கி, 24-ந்தேதி தசமி திதி வரை 9 நாட்களே வருகிறது.

ஆனால் தசமி திதியன்று நடைபெறும் தசரா திருவிழா சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாளான 10-வது நாள்தான் நடைபெற வேண்டும். எனவே நவராத்திரி பூஜையை 15-ந்தேதி மாலை தொடங்கலாம் என்று சொல்கிறார்கள். ஏனெனில் 15-ந்தேதி மகாளய அமாவாசை மாலை 6.27 மணி வரையே உள்ளது.

அதன்பிறகு பிரதமை திதி தொடங்கி விடுகிறது. ஆகையால் 15-ந்தேதி மாலை 6.27 மணிக்கு பிறகு நவராத்திரியின் முதல்நாள் பூஜையைத் தொடங்கி விடலாம். மறுநாள் 16-ந்தேதி பிற்பகலில் பிரதமை திதி முடிந்து தூவாதியைத் திதி தொடங்கிவிடுகிறது. எனவே அன்று நவராத்திரி 2-வது நாள் பூஜைகளை நடத்தலாம்.

திருப்பதி கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் இப்படி 15-ந்தேதி தொடங்கி நடத்தும் வகையில்தான் வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே நாமும் 15-ந்தேதி மாலை பிரதமை திதி தொடங்கியதும், நவராத்திரி பூஜைகளை தொடங்குவதில் தவறு இல்லை.

என்றாலும் சிலர் மகாளய அமாவாசை தினத்தன்று எப்படி நவராத்திரி பூஜையை தொடங்குவது என்று தயங்குகிறார்கள். இத்தகைய தயக்கத்துடன் இருப்பவர்களுக்காக, மற்றொரு மாற்று வழி கூறப்பட்டுள்ளது. அதன்படி 16-ந்தேதி நவராத்திரி பூஜையை தொடங்கலாம். 16-ந்தேதி காலை பிரதமை திதியில் முதல் நாளுக்குரிய பூஜையை நடத்தலாம்.

மாலை நேரத்தில் 2-வது நாளுக்குரிய அலங்காரம் செய்து பூஜை செய்யலாம். இப்படி செய்வதால் 16-ந்தேதி முதல் நாளே 2 நாட்களுக்குரிய பூஜைகள் நடந்து முடிந்து விடும். மறுநாள் 17-ந்தேதி 3-வது நாள் பூஜையாக தொடரும். எனவே 24-ந்தேதி 10-வது நாள் விஜயதசமி தசரா விழா கொண்டாடுவதற்கு சரியாக இருக்கும்.

இந்த விஷயத்தில் குழப்பமே தேவை இல்லை. உங்கள் வசதிக்கு ஏற்ப நவராத்திரி பூஜையை தொடங்கலாம். 15-ந்தேதி மாலை தொடங்க நினைப்பவர்கள், அன்றே அம்மனுக்கு அலங்காரம் செய்து, அம்மனை அழைத்து பூஜை நடத்தலாம்.

அன்றே நல்ல நேரம் பார்த்து கொலு வைத்து விடலாம். 15-ந்தேதி பூஜையை தொடங்க முடியாதவர்கள் 16-ந்தேதி தொடங்கலாம். அன்று 2 தடவை பூஜிக்க வேண்டும் அவ்வளவுதான். உங்கள் வசதிக்கு ஏற்ப பூஜை தொடக்கத்தை தீர்மானித்து கொள்ளுங்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum