தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பித்தவெடிப்பு,கட்டிகள் உடைய,பேன் தொல்லை நீங்க,தும்மல் வராமல் இருக்க,இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்…

Go down

பித்தவெடிப்பு,கட்டிகள் உடைய,பேன் தொல்லை நீங்க,தும்மல் வராமல் இருக்க,இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்…  Empty பித்தவெடிப்பு,கட்டிகள் உடைய,பேன் தொல்லை நீங்க,தும்மல் வராமல் இருக்க,இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்…

Post  amma Sun Dec 23, 2012 3:53 pm

பழம் பெருமை மிக்க வைத்திய முறையான சித்த மருத்துவம்,இன்று மிகப் பெரும்பான்மையான மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும்,பின்பற்றப் பட்டும் வருவதாகும். கடுமையான பத்தியங்களோ,குறிப்பிட்ட நோய்க்கு மருந்துகளை உட்கொண்ட பின்னர் ஏதும் பக்கவிளைவுகளோ இல்லாதது என்பது மட்டுமின்றி,பெரும் பணச் செலவு இல்லாமல் எளிய செலவிலேயே நிவாரணம் பெற முடியும் என்பதும் சித்த வைத்தியத்தின் தனிச் சிறப்பாகும்.

பித்தவெடிப்பு மறைய
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பித்தவெடிப்பு,கட்டிகள் உடைய,பேன் தொல்லை நீங்க,தும்மல் வராமல் இருக்க,இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்…
» பித்தவெடிப்பு, பேன் தொல்லை நீங்க, தும்மல் வராமல் இருக்க, இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்.
» இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்…
» நுரையீரல் வலி குணமாக சித்த வைத்தியம்
» பேன் தொல்லை நீங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum