தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வாழ்வில் மறக்க முடியாத பிச்சைக்காரர்: பிரபுதேவா

Go down

என் வாழ்வில் மறக்க முடியாத பிச்சைக்காரர்: பிரபுதேவா Empty என் வாழ்வில் மறக்க முடியாத பிச்சைக்காரர்: பிரபுதேவா

Post  ishwarya Fri Apr 19, 2013 5:03 pm

ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத சம்பங்கள் என்று ஏதாவது ஒன்று இருக்கும். அந்தவகையில் நடிகர் பிரபுதேவாவிடம் தம் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் எது என்று கேட்டால் உடனே மும்பை பிச்சைக்காரர் என்று தடலாடியாக கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒருசமயம் நான் மும்பையில் காரில் சென்றேன். இடையில் ஒரு இடத்தில் டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பிச்சைக்காரர் ஒருவர், சிக்னலில் பிச்சை கேட்டு கொண்டிருந்தார். என்னுடைய கார் கண்ணாடியையும் தட்டி பிச்சை கேட்டார். நான் கார் கண்ணாடியை கீழே இறக்கினேன். என்னை பார்த்ததும், அந்த பிச்சைக்காரர் தடாலென்று தன்னுடைய பிச்சை பாத்திரத்தை கீழே போட்டுவிட்டு ஆட ஆரம்பித்துவிட்டார். இதை பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சரியம். காரணம் நான் நடித்த படமொன்றில் ஆடிய ஆட்டத்தை அவர் ஆடினார். இந்தநேரம் பார்த்து சிக்னல் விழுந்துவிட நான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டிய கட்டாயமாகிவிட்டது. அந்த பிச்சைக்காரருக்கு என்னால் உதவ முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வெகு நாட்களாக வாட்டியது. அவருக்கு உ‌தவ முடியவில்லையே என்று இப்போதும் வருந்துகிறேன். அந்த சம்பவம் என் வாழ்வில் மறக்க முடியாதது என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum