தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கற்பு முடிந்து போன விஷயம் – குஷ்பு பேட்டி

Go down

கற்பு முடிந்து போன விஷயம் – குஷ்பு பேட்டி Empty கற்பு முடிந்து போன விஷயம் – குஷ்பு பேட்டி

Post  ishwarya Fri Apr 19, 2013 4:28 pm

கற்பு முடிந்து போன விஷயம்; அது பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார். ஏற்கனவே பெண்களின், கற்பு குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் நடிகை குஷ்பு.

ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் “பிளையிங் கிஸ் கொடுத்து நேற்று தொடங்கினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்த குஷ்பு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கற்பு குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை தெரிவித்தார். பெண்களின் “கற்பு குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு, என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே? என்று கேட்டதற்கு, கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பேட்டியை முடித்துக் கொண்டு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கற்பு குறித்த நீதிபதிகளின் கருத்து – சுப்ரீம் கோர்ட்டில் 5 மணி நேரம் அமர்ந்து கேட்ட குஷ்பு
» சமரசம் பேசி நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயலவில்லை: நடிகை குஷ்பு பேட்டி
» முத்தம் கொடுக்கிறது ஒரு அழகான விஷயம்! – சமீரா ரெட்டி
» பதற்றத்தில் கற்பு நடிகை
» கற்பு குறித்துப் பேசி வாங்கிக் கட்டியபோது குஷ்புவைக் காத்தது ஜெயலலிதாதான் – சிங்கமுத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum