தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்றுமாம்!!

Go down

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்றுமாம்!! Empty இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்றுமாம்!!

Post  ishwarya Fri Apr 19, 2013 2:49 pm

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்களுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர்யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியிருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

உலக கோப்பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி வெற்றி பெறும்; இந்தியா ஜெயிக்காது என்று நினைக்கிறேன், என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருப்பதாகவும், இந்த உலக கோப்பை போட்டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர், சாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடித்தருவார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்றும் ஆர்யா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆர்யாவின் இந்த தேசவிரோத கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண்டனத்துக்கு உள்ளானார். இப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிதான் தற்போது உயர்வாக உள்ளது. அது வலுவிழந்த அணியாக இருந்தபோது இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இளைஞரும் பிரார்த்தித்தனர். அரை இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன்னணி சகோதரர்கள் இணைந்து இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

மதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காலத்து வாங்குவது இளைஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்கனவே சூதாட்டத்திலும், போதை மருந்து வழக்குகளிலும் சிக்கி பல சிறந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டு அந்த அணி சின்னா பின்னமாகி கிடக்கிறது. அந்த அணிக்கு ஆதரவாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவை வெற்றி நாயகனாக்கிய தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகர் ஆர்யா, பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்தார். இப்போது இந்தியாவுக்கு எதிராக பேசி புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆர்யாவின் ஆரூடம் பலிக்குமா? இல்லையா? என்பதல்ல இப்போதைய கேள்வி. ஒரு இந்தியனாக, அதுவும் பிரபலமான நடிகனாக இருந்து கொண்டு அவர் இப்படி சொல்லியிருப்பது சரியா, தவறா? என்பது பட்டிமன்ற விவாத்துக்குரியதுதானே!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum