செக்ஸ் டார்ச்சர் : தயாரிப்பாளர் மீது கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்!!
Page 1 of 1
செக்ஸ் டார்ச்சர் : தயாரிப்பாளர் மீது கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்!!
தமிழ் சினிமா தயாரிப்பாளர் தனது ஆசைக்கு இணங்கும்படி செக்ஸ் டார்ச்சர் செய்கிறார் என்று பாலிவுட் கவர்ச்சி நடிகை ஒருவர் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். பாலிவுட்டில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருபவர் நிஷா யாதவ் (வயது 22). இவர் தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழி படங்களிலும், டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ளார். மும்பையில் உள்ள குரார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், சென்னையை சேர்ந்த பட அதிபர் ராம்நாத் ஆனந்தன் என்பவர் மீது, குரார் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது: கடந்த ஜுன் மாதம் மும்பையில் உள்ள ஒரு பாரில், ராம்நாத் ஆனந்தன் என்னை சந்தித்தார். அவர் தன்னை சென்னையை சேர்ந்த தமிழ் பட தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். தனது புது படத்தில் கவர்ச்சி வேடம் ஒன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக அவர் கூறினார். அதன்பிறகு என்னுடன் நட்பானார். அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை அடிக்கடி அழைத்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று ராம்நாத் ஆனந்தன் தொந்தரவு செய்தார். அவருடைய ஆசைக்கு நான் சம்மதிக்க மறுத்து விட்டேன். இதனால் அவர் என்னை மிரட்ட தொடங்கினார்.
சில நாட்களுக்கு முன்னர் ஆனந்தன் எனக்கு போன் செய்து சென்னைக்கு வருமாறும் அங்கு வந்து தன்னுடன் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் கோபமடைந்த நான், ஆனந்தனுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டேன். ஆனாலும் அவர் எனக்கு மீண்டும், மீண்டும் போன் செய்து மிகவும் ஆபாசமாக பேசி வந்தார். என்னுடன் வசிக்காவிட்டால் உன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும். பிரபல தாதா சோட்டாராஜன் என்னுடைய நண்பர் என்று மிரட்டினார். எனக்கு தொந்தரவு கொடுத்து வரும் ஆனந்த் ராம்நாத் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகாரில் கூறியிருந்தார்.
நடிகை நிஷாவின் புகாரை பேற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அதில் கூறி இருப்பதாவது: கடந்த ஜுன் மாதம் மும்பையில் உள்ள ஒரு பாரில், ராம்நாத் ஆனந்தன் என்னை சந்தித்தார். அவர் தன்னை சென்னையை சேர்ந்த தமிழ் பட தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். தனது புது படத்தில் கவர்ச்சி வேடம் ஒன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக அவர் கூறினார். அதன்பிறகு என்னுடன் நட்பானார். அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை அடிக்கடி அழைத்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று ராம்நாத் ஆனந்தன் தொந்தரவு செய்தார். அவருடைய ஆசைக்கு நான் சம்மதிக்க மறுத்து விட்டேன். இதனால் அவர் என்னை மிரட்ட தொடங்கினார்.
சில நாட்களுக்கு முன்னர் ஆனந்தன் எனக்கு போன் செய்து சென்னைக்கு வருமாறும் அங்கு வந்து தன்னுடன் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் கோபமடைந்த நான், ஆனந்தனுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டேன். ஆனாலும் அவர் எனக்கு மீண்டும், மீண்டும் போன் செய்து மிகவும் ஆபாசமாக பேசி வந்தார். என்னுடன் வசிக்காவிட்டால் உன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும். பிரபல தாதா சோட்டாராஜன் என்னுடைய நண்பர் என்று மிரட்டினார். எனக்கு தொந்தரவு கொடுத்து வரும் ஆனந்த் ராம்நாத் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகாரில் கூறியிருந்தார்.
நடிகை நிஷாவின் புகாரை பேற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார்
» சம்பள பாக்கி கேட்டதால் கேவலமாகப் பேசினார் – தயாரிப்பாளர் மீது நடிகை ரேஷ்மி புகார்!
» தினமும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை: நடிகை மாயா மீது சீதா பரபரப்பு புகார் “பெண் தாதாவைபோல் என்னை மிரட்டுகிறார்”
» அனுஷ்கா – தமன்னா மீது இலியானா பரபரப்பு புகார்!
» காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது விஜயலட்சுமி பரபரப்பு புகார்!
» சம்பள பாக்கி கேட்டதால் கேவலமாகப் பேசினார் – தயாரிப்பாளர் மீது நடிகை ரேஷ்மி புகார்!
» தினமும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை: நடிகை மாயா மீது சீதா பரபரப்பு புகார் “பெண் தாதாவைபோல் என்னை மிரட்டுகிறார்”
» அனுஷ்கா – தமன்னா மீது இலியானா பரபரப்பு புகார்!
» காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது விஜயலட்சுமி பரபரப்பு புகார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum