தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவரைக்காய் பொடிதூவிய கறி

Go down

அவரைக்காய் பொடிதூவிய கறி Empty அவரைக்காய் பொடிதூவிய கறி

Post  ishwarya Sat Apr 13, 2013 12:13 pm


தேவையான பொருள்கள்:

அவரைக்காய் = 250 கிராம்
வெங்காயம் = 50 கிராம்
மிளகாய் வற்றல் = 4
தனியா = 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
கடலை பருப்பு = 2 ஸ்பூன்
பெருங்காயம் = சிறிதளவு
தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

அவரைக்காயை அரையங்குலத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயில் முதலில் மிளகாய் வற்றல், பெருங்காயம், தனியா சேர்த்து வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். அடுத்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
இதை சிறிது ஆற விட்டுக் கொண்டு கரகரப்பாக பொடிக்கவும். தேங்காய் துருவலையும் இதே வாணலியில் எண்ணெய் விடாமல் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வாணலியை காய வைத்து எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் வெங்காயம், அவரைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இவை ஓரளவு வதங்கியதும் பொடியையும், உப்பையும் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து மேலும் வதக்கவும்.
5 நிமிடம் ஆனதும் சிறிது தண்ணீர் தெளித்து மேலும் வதக்கி மூடி வைத்து 3 நிமிடம் வேக விடவும். அதற்குள் அவரைக்காய் வெந்து இருக்கும். இறக்கி கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

சுவையான அவரைக்காய் பொடிதூவிய கறி தயார். இதை ரைஸ் குறிப்பாக சாம்பார் சாதம் மற்றும் சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum