தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கந்த புராணத்தில் பிரதோஷ மகிமை

Go down

கந்த புராணத்தில் பிரதோஷ மகிமை Empty கந்த புராணத்தில் பிரதோஷ மகிமை

Post  gandhimathi Sun Jan 20, 2013 2:44 pm




கந்த புராணத்தில் வரும் கதை இது. அடர்ந்த காடு ஒன்றில் விதவைத்தாய் ஒருத்தி தன் மகனுடன் சென்று கொண்டிருந்தாள். சற்று தூரத்தில் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பார்த்தாள். அந்நேரம் அங்கு வந்த முனிவர் ஒருவர் ``பெண்ணே! இக்குழந்தை ஓர் நாட்டின் இளவரசன். இவனது தந்தை விதர்ப்ப மன்னன் சத்யரசன் எனப் பெயர்.

மற்றொரு நாட்டு மன்னனுடன் நடந்த போரில் இவனது தந்தை இறந்து விட்டான். உயிர் பிழைக்க எண்ணி இவனது தாய் குழந்தையுடன் தலைமறைவானாள். இந்தக் கானத்தின் வழியே தப்பிக்கும் போது தாகத்திற்குத் தண்ணீர் குடிக்க ஆற்றில் இறங்கிய போது முதலை ஒன்று அவளை விழுங்கிவிட்டது.

தப்பித்த அந்த குழந்தை இவன் தான் இவனை உன்னுடன் கொண்டு சென்று வளர்த்து வா' என்றார் முனிவர். ``முனிவரே அரசனுக்கு பிறந்த இக்குழந்தைக்கு இப்படி வறுமை ஏற்பட காரணம் என்ன?'' என அம்மாதரசி கேட்டாள். அதற்கு முனிவர் முன் பிறவியில் இவனது தந்தை பாண்டிய மன்னனாய் இருந்தான்.

திடீரென்று தனது நாட்டின் மீது மாற்று நாட்டு அரசன் படையெடுக்க தான் செய்து வந்த பிரதோஷ பூஜையை பூர்த்தி செய்யாமல் சண்டைக்குச் சென்றுவிட்டான். பாதியில் பிரதோஷ பூஜையை பூர்த்தி செய்யாமல் கைவிட்டதால் சிவதோஷத்திற்கு ஆளாகி அடுத்த பிறவியில் துர்மரணமும், குடும்பத்திற்கு வசதிக் குறைவும் அடைந்திட்டான் எனக்கூறி முடித்தார்.

மேலும் முறைப்படி பிரதோஷத்தை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார். நமஸ்கரித்து விதவைத் தாயும் தன் வீடு சென்றாள். தூய மனதுடன் பிரதோஷ விரதத்தை அனுசரித்து வந்தாள். தன் குழந்தை போல இளவரசனையும் வளர்த்து வந்தாள். ஒருநாள் இரு குழந்தைகளுக்கும் காட்டு வழியில் புதையல் ஒன்று கிடைத்தது.

அதைத் தன் தாயிடம் தந்தனர். பருவ வயதை அடைந்த அரசகுமாரன் ஒரு தினம் காட்டில் கந்தர்வப் பெண் ஒருவளைக் கண்டான். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தினர். கந்தர்வப் பெண்ணின் தந்தையும் தன் மகளை இளவரசனுக்கு மணம் செய்வித்தார்.

இழந்த அவனது நாட்டையும் மீட்டுக் கொடுத்தார். தனது உடன் பிறவா சகோதரனான விதவைத் தாயார் மகனை மந்திரியாக்கி நாட்டை சுகமுடன் ஆண்டு வந்தான் இளவரசன். சிவபூஜையையும் பிரதோஷ வழிபாட்டையும் செய்து வந்ததால் பெற்ற பலனை நினைவிற் கொண்டு சிவ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டான்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum