தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொன்னார் – செய்கிறார் : ஏ.ஆர்.முருகதாஸ்

Go down

 சொன்னார் – செய்கிறார் : ஏ.ஆர்.முருகதாஸ் Empty சொன்னார் – செய்கிறார் : ஏ.ஆர்.முருகதாஸ்

Post  ishwarya Thu Apr 11, 2013 1:29 pm

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த படம் ‘எங்கேயும் எப்போதும்’. தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சரவணன் என்பவரை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குனராக்கி அழகு பார்த்தார். ‘எங்கேயும் எப்போதும்’ படம் அனைவரும் பாராட்டும்படி அமைந்தது.

‘ஏழாம் அறிவு’ இசை வெளியீட்டு விழாவில், அப்படத்தின் உதவி இயக்குனர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து “என்னை நம்பி இவர்களது பெற்றோர்கள் அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றியை நான் எப்படி கூறுவது என்று தெரியவில்லை. இந்த நல்ல தருணத்தில் அவர்களுக்கு ஒரு உறுதிமொழி அளிக்கிறேன். கண்டிப்பாக இவர்களது வாழ்க்கைக்கு நான் பொறுப்பு ” என்று கூற அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஏ.ஆர்.முருகதாஸின் இந்த பேச்சை பாராட்டினர்.

‘ எங்கேயும் எப்போதும் ‘ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த பட தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார். இப்படத்தினை இயக்கப் போவது ‘ஏழாம் அறிவு’ படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த திரு என்பவர் தான். நாயகன், நாயகி தேர்வு படலம் நடைபெற்று வருகிறது. நாயகியாக அஞ்சலி நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum