தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பகிர்வின் விழா கிறிஸ்துமஸ்

Go down

பகிர்வின் விழா கிறிஸ்துமஸ் Empty பகிர்வின் விழா கிறிஸ்துமஸ்

Post  amma Fri Jan 11, 2013 2:15 pm

"தந்தையாம் கடவுள், மனித குலத்தின் மீட்புக்காக தம் ஒரே மகனை உலகிற்கு பகிர்ந்தளித்தார்'' என்பதே கிறிஸ்துமஸ் நமக்கு தரும் செய்தி. வாக்கு என்ற பெயராலும் அழைக்கப்படும் இறைமகன் இயேசு, மனிதரான நிகழ்வை பைபிள் இவ்வாறு கூறுகிறது: `தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அது கடவுளாயும் இருந்தது.

வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின. அவரிடம் வாழ்வு இருந்தது, அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிகொண்டார்.' (யோவான் 1:1-4,14) "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.

அக்குழந்தையை `இம்மானுவேல்' என அழைப்பர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவையாவும் நிகழ்ந்தன. `இம்மானுவேல்' என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். (மத்தேயு 1:22-23) "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்.'' (லூக்கா 1:68-70) இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய இந்த நற்செய்தியே, கடவுளின் அன்பை நமக்கு எடுத்துரைக்கிறது.

பகிர்தலின் மகிழச்சியைக் கொண்டாடுவதிலேயே கிறிஸ்துமஸ் விழா அர்த்தம் பெறுகிறது. தந்தையாம் இறைவன் தமது ஒரே மகனாகிய இயேசுவை நம்மோடு பகிர்ந்து கொண்டதைப் போன்று, நாமும் நம்மிடம் உள்ளதை பிறருடன் பகிர்ந்து வாழ கிறிஸ்துமஸ் விழா அழைப்பு விடுக்கிறது. எனவேதான், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பரிசுப் பொருட்களும், வாழ்த்து அட்டைகளும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum