நடிப்பா ? இயக்கமா ?
Page 1 of 1
நடிப்பா ? இயக்கமா ?
‘சுப்பிரமணியபுரம்’, ‘பசங்க’, ‘ஈசன்’ ஆகிய படங்களை தயாரித்தவர் இயக்குனர் சசிக்குமார். இதில் ‘சுப்பிரமணியபுரம்’, ‘ஈசன்’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘போராளி’ படத்தில் நாயகனாக நடிப்பதோடு, படத்தை தயாரித்தும் வருகிறார். அடுத்ததாக அவர் செய்யப்போவது படத் தயாரிப்பா அல்லது இயக்கமா என்ற கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில் சசிக்குமார் அடுத்ததாக GNR குமரவேல் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக தமிழ் திரையுலகில் பேச்சுகள் நிலவி வந்தன.
இதுகுறித்து சசிக்குமார் தரப்பில் விசாரித்த போது ” போராளி படத்தினை நவம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. அடுத்ததாக சசிகுமார், தனது இணை இயக்குனர் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தினை சசிக்குமார் தயாரிக்கவில்லை. வேறு தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருக்கிறார்.
‘போராளி’ படம் வெளியான பிறகு உடன் இப்படத்தின் பணிகள் தொடங்கும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் ” என்று கூறினர்
இதுகுறித்து சசிக்குமார் தரப்பில் விசாரித்த போது ” போராளி படத்தினை நவம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. அடுத்ததாக சசிகுமார், தனது இணை இயக்குனர் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தினை சசிக்குமார் தயாரிக்கவில்லை. வேறு தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருக்கிறார்.
‘போராளி’ படம் வெளியான பிறகு உடன் இப்படத்தின் பணிகள் தொடங்கும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் ” என்று கூறினர்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum