நான் அரியர்ஸே வைத்ததில்லை! – அனன்யா
Page 1 of 1
நான் அரியர்ஸே வைத்ததில்லை! – அனன்யா
‘எங்கேயும் எப்போதும்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கிறார் அனன்யா. ‘குஞ்ஞளியன்’ என்ற மலையாளப் பட ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி வந்தவரை சந்தித்தோம்.
‘எங்கேயும் எப்போதும்’ மீண்டும் உங்களை தமிழ்த் திரையுலகில் பரபரப்பாக்கிவிட்டதே?
ஏ.ஆர்.முருகதாஸூக்கும், சரவணனுக்கும் நன்றி சொல்லவேண்டும். மாமாவின் (சசிகுமாரைத்தான் இப்படி அழைக்கிறார்) ‘நாடோடிகள்’ எனக்குத் தந்த நல்ல பெயரை இந்தப் படம் மேலும் கூட்டியிருக்கிறது. எனக்கு நட்சத்திர அந்தஸ்தை தமிழில் தந்தது அவர்கள்தான்.
இரண்டு நாயகிகளில் ஒருவர் என்பது எப்படி பரபரப்பான பெயரைத் தரும்?
என்னை வம்பில் சிக்க வைக்கப் பார்க்கிறீர்கள்! கதை வலுவானதாக இருந்தால் இரண்டு பேரென்ன மூன்று பேரில் ஒருவராகக்கூட நடிக்கலாம். இன்றைக்கு பாலிவுட்டிலும் கலக்கும் ஏ.ஆர்.எம். சார் கண்காணிப்பில் நடிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டுமே.
அவரது அடுத்த படத்திலும் நடிக்க இது உதவியுள்ளது. ’7ஆம் அறிவு’க்குப் பின்பு எனக்கு அந்த நல்ல வாய்ப்பு அவர் மூலம் கிடைக்கும். இதனால் இரண்டு பேரில் ஒருவராக வருவதுகூட சந்தோஷமான விஷயம்தான்.
தமிழ் இயக்குநர்களுக்கு மலையாளத்தில் ஜோடியாகிவிட்டீர்களே?
‘ஓ’ அதுவா என்று நீட்டி குரலை இழுத்தவர், மாமாவுடன் ‘மாஸ்டர்ஸ்’ படத்தில் நடித்தேன். இருந்தாலும், அதில் பிருத்விராஜுடன் சேர்ந்துதான் டூயட் பாடுகிறேன். மாமாவிற்கு அந்த வாய்ப்பு இல்லை. சமுத்திரகனியுடன் ‘ரிப்போர்ட்டர்’ படத்தில் ஜோடி.
அவர் இன்ஸ்பெக்டராக வருகிறார். மாமாகூட ‘என்னது உனக்கு ஜோடியாக வாய்ப்புக் கிடைக்காது போலிருக்குதே’ என்று கிண்டலடிப்பார். தமிழில்தான் இயக்குநர்களுடன் ஜோடியாக முடியவில்லை. மலையாளத்திலாவது நடக்கிறதே!
படிப்பு எப்படிப் போகிறது?
தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ஆலுவாவிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில்தான் பி.ஏ. கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ் முடித்தேன். இனி பி.ஜி. படிப்பு கொஞ்ச காலம் கழித்து.
பி.ஏ. முடிப்பதற்கே பயங்கர கஷ்டமாகிவிட்டது. அப்பா, அம்மா இருவரும் சேர்ந்து இரவு முழுவதும் கண் விழித்து நான் பாஸாவதற்கு உதவினார்கள். ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் நான் அரியர்ஸே வைத்ததில்லை. நம்ப மாட்டீர்கள்! சத்தியமாக சொல்கிறேன்!
நீ பாஸ் பண்ணிவிட்டால் தொடர்ந்து நடிக்கலாம் இல்லையென்றால் மீண்டும் கல்லூரிக்கே என்று அப்பா நிபந்தனைப் போட்டதால், அதற்காகவாவது பாஸாக வேண்டுமே என்று விடாமல் படித்துக் கொண்டேயிருந்தேன். ஸ்பாட்டில்கூட புத்தகமும் கையுமாகவே இருப்பேன். இப்போது ரிசல்ட் ஓகே. அப்பா க்ரீன் சிக்னல் தந்துவிட்டார். ஆனால் ஒன்று தெரியுமா? பாய்ஸைப் போல் ‘பிட்’டடிக்காமல், காப்பியடிக்காமல் என் சொந்த முயற்சியிலேயே பாஸாகியுள்ளேன்!
ஜூனியர் விஜயசாந்தி என்று எல்லோரும் பாராட்டு மழை பொழிகிறார்களாமே! அடுத்த ஸ்கிரிப்ட்டிற்காக தீவிர ஸ்டண்ட் பயிற்சிப் பெறுகிறீர்களாமே?
அது ரகசியம்! யார் டைரக்ஷன் என்பதும் ரகசியம்! ஆனால் ஜூனியர் விஜயசாந்தி என்று முதலில் அழைத்தது மோகன்லால். ‘ஷிகார்’ என்ற மலையாளப் படத்தில் என் ஸ்டண்ட் வேலைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அப்படிப் பாராட்டினார். ஆனால் இப்போது அதுவே கேரளாவில் பிரபலமாகிவிட்டது!
‘எங்கேயும் எப்போதும்’ மீண்டும் உங்களை தமிழ்த் திரையுலகில் பரபரப்பாக்கிவிட்டதே?
ஏ.ஆர்.முருகதாஸூக்கும், சரவணனுக்கும் நன்றி சொல்லவேண்டும். மாமாவின் (சசிகுமாரைத்தான் இப்படி அழைக்கிறார்) ‘நாடோடிகள்’ எனக்குத் தந்த நல்ல பெயரை இந்தப் படம் மேலும் கூட்டியிருக்கிறது. எனக்கு நட்சத்திர அந்தஸ்தை தமிழில் தந்தது அவர்கள்தான்.
இரண்டு நாயகிகளில் ஒருவர் என்பது எப்படி பரபரப்பான பெயரைத் தரும்?
என்னை வம்பில் சிக்க வைக்கப் பார்க்கிறீர்கள்! கதை வலுவானதாக இருந்தால் இரண்டு பேரென்ன மூன்று பேரில் ஒருவராகக்கூட நடிக்கலாம். இன்றைக்கு பாலிவுட்டிலும் கலக்கும் ஏ.ஆர்.எம். சார் கண்காணிப்பில் நடிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டுமே.
அவரது அடுத்த படத்திலும் நடிக்க இது உதவியுள்ளது. ’7ஆம் அறிவு’க்குப் பின்பு எனக்கு அந்த நல்ல வாய்ப்பு அவர் மூலம் கிடைக்கும். இதனால் இரண்டு பேரில் ஒருவராக வருவதுகூட சந்தோஷமான விஷயம்தான்.
தமிழ் இயக்குநர்களுக்கு மலையாளத்தில் ஜோடியாகிவிட்டீர்களே?
‘ஓ’ அதுவா என்று நீட்டி குரலை இழுத்தவர், மாமாவுடன் ‘மாஸ்டர்ஸ்’ படத்தில் நடித்தேன். இருந்தாலும், அதில் பிருத்விராஜுடன் சேர்ந்துதான் டூயட் பாடுகிறேன். மாமாவிற்கு அந்த வாய்ப்பு இல்லை. சமுத்திரகனியுடன் ‘ரிப்போர்ட்டர்’ படத்தில் ஜோடி.
அவர் இன்ஸ்பெக்டராக வருகிறார். மாமாகூட ‘என்னது உனக்கு ஜோடியாக வாய்ப்புக் கிடைக்காது போலிருக்குதே’ என்று கிண்டலடிப்பார். தமிழில்தான் இயக்குநர்களுடன் ஜோடியாக முடியவில்லை. மலையாளத்திலாவது நடக்கிறதே!
படிப்பு எப்படிப் போகிறது?
தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ஆலுவாவிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில்தான் பி.ஏ. கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ் முடித்தேன். இனி பி.ஜி. படிப்பு கொஞ்ச காலம் கழித்து.
பி.ஏ. முடிப்பதற்கே பயங்கர கஷ்டமாகிவிட்டது. அப்பா, அம்மா இருவரும் சேர்ந்து இரவு முழுவதும் கண் விழித்து நான் பாஸாவதற்கு உதவினார்கள். ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் நான் அரியர்ஸே வைத்ததில்லை. நம்ப மாட்டீர்கள்! சத்தியமாக சொல்கிறேன்!
நீ பாஸ் பண்ணிவிட்டால் தொடர்ந்து நடிக்கலாம் இல்லையென்றால் மீண்டும் கல்லூரிக்கே என்று அப்பா நிபந்தனைப் போட்டதால், அதற்காகவாவது பாஸாக வேண்டுமே என்று விடாமல் படித்துக் கொண்டேயிருந்தேன். ஸ்பாட்டில்கூட புத்தகமும் கையுமாகவே இருப்பேன். இப்போது ரிசல்ட் ஓகே. அப்பா க்ரீன் சிக்னல் தந்துவிட்டார். ஆனால் ஒன்று தெரியுமா? பாய்ஸைப் போல் ‘பிட்’டடிக்காமல், காப்பியடிக்காமல் என் சொந்த முயற்சியிலேயே பாஸாகியுள்ளேன்!
ஜூனியர் விஜயசாந்தி என்று எல்லோரும் பாராட்டு மழை பொழிகிறார்களாமே! அடுத்த ஸ்கிரிப்ட்டிற்காக தீவிர ஸ்டண்ட் பயிற்சிப் பெறுகிறீர்களாமே?
அது ரகசியம்! யார் டைரக்ஷன் என்பதும் ரகசியம்! ஆனால் ஜூனியர் விஜயசாந்தி என்று முதலில் அழைத்தது மோகன்லால். ‘ஷிகார்’ என்ற மலையாளப் படத்தில் என் ஸ்டண்ட் வேலைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அப்படிப் பாராட்டினார். ஆனால் இப்போது அதுவே கேரளாவில் பிரபலமாகிவிட்டது!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் திமிர் பிடித்தவளா? அப்படிபட்ட குடும்பத்திலிருந்து நான் வரவில்லை – ஸ்ருதிஹாசன்
» திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா
» பவர் ஸ்டாரை விரட்டியடித்த அனன்யா!
» வெட்டிப்பேச்சு நடிகைகளுக்கு அனன்யா கேள்வி!
» நிச்சயத்துடன் நின்றுபோன அனன்யா திருமணம்
» திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா
» பவர் ஸ்டாரை விரட்டியடித்த அனன்யா!
» வெட்டிப்பேச்சு நடிகைகளுக்கு அனன்யா கேள்வி!
» நிச்சயத்துடன் நின்றுபோன அனன்யா திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum