நிறைய பேர் பைனான்ஸ் தருவதால் ரஜினி, கமல், விஜய், சூர்யா படங்களை தயாரிப்பது எளிது – எஸ்.ஏ.சந்திரசேகரன்
Page 1 of 1
நிறைய பேர் பைனான்ஸ் தருவதால் ரஜினி, கமல், விஜய், சூர்யா படங்களை தயாரிப்பது எளிது – எஸ்.ஏ.சந்திரசேகரன்
தருண், சத்ரியா, தர்ஷன், ஷிகா நடித்துள்ள “படம் பார்த்து கதை சொல்” படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இயக்குனர் சேரன் சி.டி.யை வெளியிட நடிகர் பரத் பெற்றுக் கொண்டார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திர சேகரன் விழாவில் பங்கேற்று பேசியதாவது:
கதையே இல்லாமல் பல படங்கள் எடுக்கப்படுகின்றன. கதையை புரிந்து கொள்ள பல தடவை பார்க்க வேண்டிய படங்களும் உள்ளன. “படம் பார்த்து கதை சொல்” படத்தில் கதை இருக்கிறது என்பதை தலைப்பின் மூலம் உணர்த்தியுள்ளார்கள். தமிழ் ரசிகர்கள் புத்திசாலிகளாக உள்ளனர். தலைப்பை வைத்தே கதை சொல்லி விடுகின்றனர். இந்த சூழலில் இயக்குனர்கள் கதையை செதுக்கி சிற்பமாக்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்றவர்களை வைத்து இன்று படம் தயாரிப்பது எளிது. அவர்களின் படங்களுக்கு பூஜை போட்டாலே நான், நீ என்று பைனான்ஸ் தருவார்கள். தியேட்டர்காரர்களும் அவர்களது படங்களை திரையிட ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பதுதான் கஷ்டம். யாரும் பைனான்ஸ் தர முன்வர மாட்டார்கள். வினியோகஸ்தர்களும் படம் பார்க்க இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று கூறி இழுப்பார்கள்.
சிறு பட தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்வோம் என்று சொல்லித்தான் நாங்கள் ஜெயித்துள்ளோம். கண்டிப்பாக அவர்கள் நலம் பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் பரத், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் கலைப்புலி தாணு, செயலாளர் தேனப்பன், இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், ராசுமதுரவன், தருண்கோபி, “படம் பார்த்து கதை சொல்” பட இயக்குனர் பென்ஜமீன் பிரபு, தயாரிப்பாளர்கள் எஸ்.மணி, எஸ்.ரங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திர சேகரன் விழாவில் பங்கேற்று பேசியதாவது:
கதையே இல்லாமல் பல படங்கள் எடுக்கப்படுகின்றன. கதையை புரிந்து கொள்ள பல தடவை பார்க்க வேண்டிய படங்களும் உள்ளன. “படம் பார்த்து கதை சொல்” படத்தில் கதை இருக்கிறது என்பதை தலைப்பின் மூலம் உணர்த்தியுள்ளார்கள். தமிழ் ரசிகர்கள் புத்திசாலிகளாக உள்ளனர். தலைப்பை வைத்தே கதை சொல்லி விடுகின்றனர். இந்த சூழலில் இயக்குனர்கள் கதையை செதுக்கி சிற்பமாக்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்றவர்களை வைத்து இன்று படம் தயாரிப்பது எளிது. அவர்களின் படங்களுக்கு பூஜை போட்டாலே நான், நீ என்று பைனான்ஸ் தருவார்கள். தியேட்டர்காரர்களும் அவர்களது படங்களை திரையிட ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பதுதான் கஷ்டம். யாரும் பைனான்ஸ் தர முன்வர மாட்டார்கள். வினியோகஸ்தர்களும் படம் பார்க்க இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று கூறி இழுப்பார்கள்.
சிறு பட தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்வோம் என்று சொல்லித்தான் நாங்கள் ஜெயித்துள்ளோம். கண்டிப்பாக அவர்கள் நலம் பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் பரத், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் கலைப்புலி தாணு, செயலாளர் தேனப்பன், இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், ராசுமதுரவன், தருண்கோபி, “படம் பார்த்து கதை சொல்” பட இயக்குனர் பென்ஜமீன் பிரபு, தயாரிப்பாளர்கள் எஸ்.மணி, எஸ்.ரங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படப்பிடிப்புகள் ரத்து: ரஜினி,கமல்,விஜய்,அஜீத், சூர்யா ஓட்டு போடுகின்றனர்
» என்னோட வளர்ச்சியில் ரஜினி, கமல் அக்கறை! விஜய் பேட்டி!!
» பென்டாஸ்டிக் என்றார் ரஜினி, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்றார் கமல் – சூர்யா பெருமிதம்
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» சூர்யா நடிக்க கஜினி 2-ம் பாகம் தயாராகும்: படஅதிபர் சந்திரசேகரன் தகவல்
» என்னோட வளர்ச்சியில் ரஜினி, கமல் அக்கறை! விஜய் பேட்டி!!
» பென்டாஸ்டிக் என்றார் ரஜினி, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்றார் கமல் – சூர்யா பெருமிதம்
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» சூர்யா நடிக்க கஜினி 2-ம் பாகம் தயாராகும்: படஅதிபர் சந்திரசேகரன் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum