தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தையின் உயிரை காப்பாற்றிய அஜித்! – தலையின் மனிதநேயத்தை காட்டும் வெளியில் கசிந்த இன்னுமொரு செய்தி

Go down

குழந்தையின் உயிரை காப்பாற்றிய அஜித்! – தலையின் மனிதநேயத்தை காட்டும் வெளியில் கசிந்த இன்னுமொரு செய்தி Empty குழந்தையின் உயிரை காப்பாற்றிய அஜித்! – தலையின் மனிதநேயத்தை காட்டும் வெளியில் கசிந்த இன்னுமொரு செய்தி

Post  ishwarya Tue Apr 09, 2013 5:12 pm

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர். உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயா என்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே. முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம். மனம் தளராத அந்த உதவி இயக்குனர், மருந்து வாங்க 500/ ரூபாய் கேட்டாராம் அதைக்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த்.

நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம். படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் இருவருக்கும் உணவு வழங்கி விட்டு நடிக்க போய் விட்டாராம். பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம். ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை. அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..

இவரோ குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில் துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.

விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம். கோபமான அஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள் என்று அதட்டவும், எழுபத்து ஐந்து ஆயிரம் தேவை என்று சொல்லவும், மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.

அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச்சி கண்ணீர் வரவைத்து விட்டது. நாட்டை ஆள்வதற்கு துடிக்கும் விஜயகாந்தின் மனதிற்கும், செய்வதை பிறர்க்கு தெரியாமல் செய்ய நினைக்கும் அஜித்தின் மனதிற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து.

அவர் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அவரின் பெயரை நாம் வெளியிடவில்லை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum