பெரியாழ்வாரின் பிள்ளைப்பாசம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பெரியாழ்வாரின் பிள்ளைப்பாசம்
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படும் ஆண்டாள் தற்போது கோவில் அருகே உள்ள நந்தவனத்தில் ஆடி பூரம் அன்று அவதரித்தாள். நந்தவனத்தில் பெருமாளுக்கு பூக்கள் பறிக்க சென்ற பெரியாழ்வாரின் காதில் ஒரு குழந்தையின் அழுகை குரல் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது ஆண்டாள் குழந்தை வடிவில் அழுது கொண்டிருந்தாள்.
குழந்தை யாருடையது என தெரியாமல் தவித்த பெரியாழ்வார் இது ஆண்டவன் அருள் என கருதி அந்த குழந்தையை எடுத்து வந்து மகளாக வளர்த்தார். பருவ வயதை அடைந்ததும் ஆண்டாள் இறைவனையே காதலித்து மணந்து கொண்டாள். பெரியாழ்வார் தன்மகள் மீது அதிக பாசம் கொண்டிருந்தார்.
ஒரு தந்தை தன் மகள் மீது எவ்வாறு பாசம் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார் பெரியாழ்வார். ஆண்டாளை அவர் ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுக்க சென்றபோது ஆண்டாள் பெருமாளுடன் சேர்ந்து மறைந்து விட்டாள். அப்போது தன்மகளை காணாத அவர் துயரத்தில் வருத்தப்பட்டு பாடினார்.
அதில் தனது இல்லத்தில் மகாராணி போல் வளர்ந்தவள் தற்போது பெருமாளை மணம் முடிக்கின்றாளே, அவள் இங்கே இருந்தது போல் சிறப்புடன் அங்கே வாழ்வாளா? என்று மனம் வருத்தப்பட்டு பாடினார். இது அவர் ஆண்டாள் மீது வைத்திருந்த அளவில்லா பாசத்தை வெளிப்படுத்துவதாகும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெரியாழ்வாரின் பிள்ளைப்பாசம்
» பெரியாழ்வாரின் பிள்ளைப்பாசம்
» பெரியாழ்வாரின் பாசுரங்கள்
» பெரியாழ்வாரின் பாசுரங்கள்
» பெரியாழ்வாரின் பாசுரங்கள் - எளிய தமிழ் உரை
» பெரியாழ்வாரின் பிள்ளைப்பாசம்
» பெரியாழ்வாரின் பாசுரங்கள்
» பெரியாழ்வாரின் பாசுரங்கள்
» பெரியாழ்வாரின் பாசுரங்கள் - எளிய தமிழ் உரை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum