தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷை வைத்து படம் பண்ண முடியாது: கஸ்தூரி ராஜா!

Go down

தனுஷை வைத்து படம் பண்ண முடியாது: கஸ்தூரி ராஜா! Empty தனுஷை வைத்து படம் பண்ண முடியாது: கஸ்தூரி ராஜா!

Post  ishwarya Fri Apr 05, 2013 5:41 pm

தனுஷை வைத்து படம் பண்ண முடியாது: கஸ்தூரி ராஜா! NT_120225165932000000-e1330190644816என்னால்
தனுஷை வைத்து படம் பண்ண முடியாது என்று அவரது அப்பாவும், இயக்குநருமான
கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கஸ்தூரி
ராஜா, துள்ளுவதோ இளமை படம் மூலம் தனது மகன் தனுஷை ஹீரோவாக
அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில்
காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து தொடர் ஹிட்
படங்களாக கொடுத்த தனுஷ், வெற்றி நாயகனாக ஜொலித்தார். தென்னக ப்ரூஸ்லி
என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கும் தனுஷ், நீண்ட
இடைவெளிக்கு பிறகு தனது அப்பா கஸ்தூரி ராஜா தயாரிப்பில் 3 படத்தில்
நடித்துள்ளார். இப்படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கி இருக்கிறார்.

3 படம் வெளிவருவதற்கு முன்பே அப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல்
தனுஷை உயரிய நிலைக்கு கொண்டு போய் உள்ளது. பிரதமர் விருந்தில் பங்கேற்பு,
சச்சின் டெண்டுல்கருக்கு ஆல்பம் என்று உயர பறந்து கொண்டிருக்கிறார் தனுஷ்.
கொலவெறி பாடலாலேயே 3 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகி
இருக்கிறது. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அனைவரும் காத்து கொண்டு
இருக்கின்றனர்.

இந்நிலையில் 3 படம், மார்ச் 30ம்‌ தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக,
அப்படத்தின் தயாரிப்பாளரும், தனுஷின் அப்பாவுமான கஸ்தூரி ராஜா
தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் தனுஷை வைத்து தன்னால் படம் இயக்க
முடியாது என்றும், அவருடைய ரேஞ்சு எங்கேயோ போய்விட்டது என்றும், இனிமேல்
தான் படம் எடுத்தால் புதுமுகங்களை வைத்து தான் படம் எடுப்பேன் என்றும்
கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum