தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுற்றுப்புறசூழலை பாதிக்காத வகையில் மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்

Go down

 சுற்றுப்புறசூழலை பாதிக்காத வகையில் மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்  Empty சுற்றுப்புறசூழலை பாதிக்காத வகையில் மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்

Post  amma Thu Apr 04, 2013 6:29 pm



சுற்றுப்புறசூழலை பாதிக்காத வகையில், மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் வகுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தடை விதிக்க வேண்டும்

சென்னையில் மெரினா கடற்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடற்கரையில் பொழுதைக் கழிக்க விரும்புகிறவர்கள், இந்தக்கடைகளில் தின்பண்டங்கள், பொருட்களை வாங்குகின்றனர்.இந்த சூழ்நிலையில், காந்திஜி பொது மன்றத்தைச்சேர்ந்த பாலாஜி, ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளில் உணவுகள் தரமானதாக இருப்பதில்லை. அங்குள்ள கடைகளால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்பட்டு, மெரினாவின் அழகு கெடுகிறது. எனவே அங்கு கடைகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இடைக்காலத்தடை

இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், என்.பால்வசந்தகுமார் ஆகியோர் விசாரிக்கின்றனர். கடந்த ஜனவரி 29–ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரையில் கடைகள் நடத்த அனுமதி தருவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பதில்மனு தாக்கல்

ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்த பிறகும் மெரினா கடற்கரையில் போடப்பட்டுள்ள தற்காலிக கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.இந்த வழக்கை கடந்தமுறை விசாரித்தபோது, பதில்மனு தாக்கல் செய்வதற்கு மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தோம். அதன்படி மாநகராட்சி கமிஷனர் பதில்மனு தாக்கல் செய்தார்.

வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது

அதில், மெரினாவில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக போடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கடைகள், மாநகராட்சியின் உரிமம் பெறாமலும், அனுமதி இல்லாமலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கை உட்படுத்தப்படுகிறது.மேலும் அங்கு கடைகளை நடத்துவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்குவதுமில்லை, அதற்காக கட்டணம் வசூலிப்பதுமில்லை. என்றாலும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையிலும், கடற்கரையின் சுற்றுப்புறசூழல் பாதிக்கப்படாத வகையிலும், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய திட்டத்தை வகுக்க மாநகராட்சி முன்வந்துள்ளது.

கால அவகாசம்

கடற்கரையில் நிரந்தர கட்டுமானங்களை யாரும் ஏற்படுத்தாத வகையில், கடைகளை ஒழுங்குபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக இதற்காக கடைக்காரர்களை கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இந்த திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர குறைந்தபட்சம் 3 மாதங்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாநகராட்சிக்கு காலஅவகாசம் அளிக்கிறோம். அதற்கேற்ற வகையில் இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 4–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum