தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துபாயில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமருக்கு, வைகோ கோரிக்கை

Go down

 துபாயில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமருக்கு, வைகோ கோரிக்கை  Empty துபாயில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமருக்கு, வைகோ கோரிக்கை

Post  amma Thu Apr 04, 2013 6:22 pm



துபாயில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு அனுப்புவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து, ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த போது...

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7–ந் தேதி, தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக 45 ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் பயணித்தபோது, அவர்கள் சென்ற மரக்கலம் பழுது பட்டதால், தங்கள் உயிர்களைக் காக்குமாறு அபயக் குரல் எழுப்பினர்.அப்பொழுது துபாயைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் இருந்த மாலுமிகள், அவர்களைக் காப்பாற்றி, தங்கள் கப்பலில் ஏற்றி துபாயில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

அடைக்கலம் கேட்டனர்

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளில் அத்தமிழர்கள் அடைக்கலம் கேட்டனர். சுவீடன் நாடு 7 ஈழத் தமிழர்களையும், அமெரிக்கா ஒருவரையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.6 ஈழத்தமிழர்கள் கட்டாயப்படுத்தி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கொழும்புக்கு அனுப்பப்பட்டனர். மீதம் இருக்கக்கூடிய 31 தமிழர்களில், 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒரு வார காலத்துக்குள், கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப்போவதாக துபாய் அரசு அறிவித்து உள்ளது.

முன்பு போல் கொடுமை நிகழும்

இந்த 19 பேரில் ஒருவரான இளம்பெண் ஹரினி, தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர். இதேபோன்ற செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு, படுகொலைக்கு உள்ளான காட்சியை சேனல்–4 தொலைக்காட்சி கடந்த 2010–ல் வெளியிட்டதால், உலகெங்கும் உள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.இப்போது ஹரினி கொழும்புக்கு அனுப்பப்பட்டால், அதே போன்ற கொடுமை நிகழும்; ஹரினியும் கொல்லப்படுவார்.

பிரதமருக்கு கோரிக்கை

எனவே, துபாயில் இருக்கின்ற 19 ஈழத்தமிழர்களையும் இலங்கைக்கு துபாய் அரசு அனுப்பவிடாமல், மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பாதுகாக்க ஐக்கிய அரபு குடியரசு மூலம் உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுகிறேன்.இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ கூறி உள்ளார்.

யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங்குடன் சந்திப்பு

மேலும் ஹரினி உள்ளிட்ட 19 பேரை பாதுகாப்பதற்காக, வைகோ அவர்கள் நேற்றைய தினம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் ஆகியோரை டெல்லியில் நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி கடிதமும் கொடுத்து உள்ளார்.இதுகுறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அவர்கள் இருவரும் வைகோவிடம் உறுதி அளித்து உள்ளனர்.இவ்வாறு ம.தி.மு.க. தலைமைக்கழக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» வலி வடக்கு கிழக்கு காணி சுவீகரிப்பதை தடுத்து நிறுத்த வாரீர். பகிரங்க அழைப்பு.
» இலங்கையுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்:வைகோ
» ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்:தூத்துக்குடியில் வைகோ பேட்டி
» அனைத்து கட்சியினரும் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: வைகோ அறிக்கை
» அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முன்னதாக தொடங்க வேண்டும்: இங்கிலாந்து கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum