தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரு அதிகார மையங்கள் பற்றி காங்கிரசில் கருத்து வேறுபாடு தனது முடிவில் உறுதியாக இருப்பதாக திக்விஜய்சிங் பேட்டி

Go down

இரு அதிகார மையங்கள் பற்றி காங்கிரசில் கருத்து வேறுபாடு தனது முடிவில் உறுதியாக இருப்பதாக திக்விஜய்சிங் பேட்டி Empty இரு அதிகார மையங்கள் பற்றி காங்கிரசில் கருத்து வேறுபாடு தனது முடிவில் உறுதியாக இருப்பதாக திக்விஜய்சிங் பேட்டி

Post  amma Thu Apr 04, 2013 5:57 pm



காங்கிரசில் இரு அதிகார மையங்கள் பற்றி காங்கிரசில் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. தனது முடிவில் உறுதியாக இருப்பதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறி இருக்கிறார்.

பிரதமர் வேட்பாளர்

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2–வது முறையாக ஆட்சி நடத்தி வருகிறது. ஆட்சி தலைவராக பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தியும் பதவி வகித்து வருகிறார்கள்.

அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணி சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

இரு அதிகார மையங்கள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான திக்விஜய்சிங், நாட்டில் இரு அதிகார மையங்கள் (கட்சி தலைவராக சோனியா–பிரதமராக மன்மோகன்சிங்) வெற்றிகரமாக செயல்பட முடியாது என்றும், அடுத்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

ஆனால், அவருடைய இந்த கருத்தை காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ தலைமை செய்தி தொடர்பாளரும், மற்றொரு பொதுச்செயலாளருமான ஜனார்த்தன் திவிவேதி நிராகரித்துவிட்டார். ‘‘சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இடையே இருந்து வரும் உறவு, வேறு எங்கும் பார்க்க முடியாத அளவுக்கு தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற ஒரு உறவு அமைந்திருப்பது, மற்றவர்கள் பின்பற்றத்தகுந்த ஒன்றாகும்’’ என்றும் அவர் கூறி இருந்தார்.

முடிவில் உறுதி

ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்த திவிவேதி, ‘‘ராகுல்காந்தி கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த அடிப்படையில் கட்சியை பலப்படுத்தும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சி பார்த்துக்கொள்ளும். தற்போதைய நிலையில் மன்மோகன்சிங்தான் பிரதமர். இந்த ஏற்பாடு நன்றாகவே செயல்பட்டு வருகிறது’’ என்றார்.

திவிவேதியின் இந்த கருத்து குறித்து கேட்டபோது, ஏற்கனவே தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக, திக்விஜய்சிங் கூறினார். அதே நேரத்தில், நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘‘இந்த பிரச்சினையில் நான் தெரிவித்த கருத்துகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கும் கருத்துக்கு நான் கட்டுப்படுவேன்’’ என்று விளக்கம் அளித்தார்.

செயல்படாத பிரதமரா?

திக்விஜயசிங்கைப் பொறுத்தவரை மனதில் பட்டதை வெளிப்படையாகவும், கட்சியின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தாக இருந்தாலும் தயங்காமல் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர். இதன் மூலம் அடிக்கடி அவர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

இரு அதிகார மையங்கள் நன்றாக செயல்பட முடியாது என்று அவர் கருத்து கூறியபோது, ‘‘பிரதமராக யார் இருக்கிறார்களோ அவர்கள் செயல்படுவதற்கான அதிகாரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

இதன் மூலம் மன்மோகன்சிங் செயல்படாத பிரதமர் என்று, எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக திக்விஜய்சிங்கின் கருத்து அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறு பிரச்சினையில் கருத்து வேறுபாடு: திருமணத்தை முறித்துக் கொண்டேன்-நடிகை சுஜிபாலா
» ரஜினியின் புதிய படமான கோச்சடையான் பற்றி கருத்து கூறும் கே எஸ் ரவிக்குமார்
» ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன்
» ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன்
» ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum