தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கற்பழித்த ஆசாமியை எரித்துக் கொன்ற விதவை பெண் பீகாரில் சம்பவம்

Go down

 கற்பழித்த ஆசாமியை எரித்துக் கொன்ற விதவை பெண் பீகாரில் சம்பவம்  Empty கற்பழித்த ஆசாமியை எரித்துக் கொன்ற விதவை பெண் பீகாரில் சம்பவம்

Post  amma Thu Apr 04, 2013 5:25 pm



பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பர்சா பசார் அருகே ஸ்வீதா கிராமத்தை சேர்ந்த ஒரு விதவை பெண், இரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த போலா தாக்குர் (வயது 45) என்பவர் குடிபோதையில் அவ்வீட்டுக்குள் நுழைந்து, அப்பெண்ணை கற்பழித்து விட்டார். பின்னர், அங்கேயே தூங்கி விட்டார்.அந்த பெண், அவமானம் தாங்காமல், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தன் மீது மண்எண்ணெயை ஊற்றினார். திடீரென அவர் மனம் மாறினார். தற்கொலை செய்து கொள்வதற்கு பதிலாக, பழிக்குப்பழி வாங்க முடிவு செய்தார்.அதன்படி, மண்எண்ணெயால் ஊறிய தனது சேலையை போலா தாக்குர் மீது வீசி, அதன்மீது தீவைத்து விட்டு வெளியே தப்பி ஓடினார். அடுத்த விநாடி, வீடு முழுவதும் தீப்பிடித்து, போலா தாக்குர் பலியானார். தகவல் அறிந்த போலீசார் வந்து அப்பெண்ணை கைது செய்தனர். அவர் கற்பழிக்கப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர்.அந்த பெண்ணுக்கு திருமணமான 2 மகள்களும், திருமணம் ஆகாத ஒரு மகனும் உள்ளனர். கொல்லப்பட்ட போலா தாக்குருக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர் மீது ஈவ் டீசிங், பெண்களை துன்புறுத்துதல் போன்ற 12 வழக்குகள் உள்ளன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum