தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் மேலும் அதிகரிப்பு:கூட்டு தொழில் மண்டல பாதையை வடகொரியா அதிரடியாக மூடியது

Go down

 கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் மேலும் அதிகரிப்பு:கூட்டு தொழில் மண்டல பாதையை வடகொரியா அதிரடியாக மூடியது  Empty கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் மேலும் அதிகரிப்பு:கூட்டு தொழில் மண்டல பாதையை வடகொரியா அதிரடியாக மூடியது

Post  amma Thu Apr 04, 2013 5:12 pm



கூட்டு தொழில் மண்டல பாதையை வடகொரியா மூடி அதிரடி நடவடிக்கை எடுத்ததால், கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வடகொரியாவில் உள்ள தங்கள் மக்களின் உயிரை பாதுகாக்க தென்கொரியா உறுதி பூண்டுள்ளது.

போர்ப்பதற்றம் அதிகரிப்பு

அணு ஆயுத சோதனை, ஆயுதக்குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக வட கொரியா மீது ஐ.நா. பொருளாதார தடைகளை அமல்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்காவின் முன்முயற்சியும், தென்கொரியாவின் ஆதரவும் வடகொரியாவுக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவ்விரு நாடுகளையும் தாக்குவதற்கு வடகொரியா தயாராகி வருகிறது. அந்த நாடு தொடர்ந்து போர் ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த நாட்டின் பீரங்கிப்படைகளும், ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவும் யுஎஸ்எஸ் ஜான் எஸ் மெக்கைன் என்னும் தனது நாசகார போர்க்கப்பலை தென்கொரியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது. போர்த்தளவாடங்கள், ரேடார்கள் போன்றவையும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தென்கொரியாவுடனான ராணுவ தொலைதொடர்பு வசதியை (ஹாட்லைன்) வடகொரியா துண்டித்தது.

பாதை மூடல்

இந்த நிலையில், வடகொரியா, தென்கொரியா இணைந்து வடகொரியாவில் ஒரு கூட்டு தொழில் மண்டலத்தை நடத்தி வந்தன. இந்த தொழில் மண்டலத்தில் 123 கம்பெனிகள் இருக்கின்றன. இதன் மூலம் 50 ஆயிரம் வடகொரிய மக்களும், தென் கொரியாவை சேர்ந்த 800 தொழில் அதிபர்களும், நிர்வாகிகளும் நேரடியாக பலன்பெற்று வந்தனர். இந்த மண்டலத்தின் மூலம் 2 பில்லியன் டாலர் (ரூ.11 ஆயிரம் கோடி) வருவாயும் கிடைத்து வந்தது.

இந்த தொழில் மண்டலத்தின் பாதையை வடகொரியா நேற்று அதிரடியாக மூடி விட்டது. அதே நேரத்தில் தென்கொரியாவை சேர்ந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று வடகொரிய அதிகாரிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்படுவார்களோ என்ற அச்சமும் நிலவுகிறது. வடகொரியா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தென்கொரியா உறுதி

இது தொடர்பாக தென் கொரிய ராணுவ மந்திரி கிம் குவான் ஜின் கூறியதாவது:– வடகொரியாவில் உள்ள கூட்டு தொழில் மண்டலத்தில் உள்ள தென் கொரிய மக்களின் உயிர்ப்பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் பரிசீலிக்கப்படுகின்றன. நிலைமை மோசமானால் ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்க வடகொரியா ஆயுத்தம்: கொரிய தீபகற்பத்தில் போர்மேகம்
» கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஐ.நா. யோசனை ‘‘பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் பேச வேண்டும்
»  நல்ல தொழில் அமைய, அமைந்த தொழில் சிறப்படைய...
» பாதையை மாற்றினார் அர்ஜுன்
» வாழ்வின் இலட்சியப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum