தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதி வெங்கடாஜலபதியை பாய்பிரண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய காம்னா…!

Go down

திருப்பதி வெங்கடாஜலபதியை பாய்பிரண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய காம்னா…! Empty திருப்பதி வெங்கடாஜலபதியை பாய்பிரண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய காம்னா…!

Post  ishwarya Thu Apr 04, 2013 3:00 pm

திருப்பதி வெங்கடாஜலபதியை பாய்பிரண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய காம்னா…! NT_120414155324000000-e1334415964223சமீபத்தில்
திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு போன நடிகை காம்னா, அவரை
பாய்பிரண்ட் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழில் இதயத்திருடன்,
மச்சக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காம்னா ஜெத்மலானி.
தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழில் ஏஸ் ராஜா
ராணி மற்றும் ஜாக்கி படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில்
திருப்பதி கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு திருப்பதி வெங்கடாஜலபதியை
தரிசித்த பின்னர், யதார்த்தமாக கடவுள் வெங்கடாஜலபதியை தன்னுடைய பாய்பிரண்ட்
என்று கூறியிருக்கிறார். காம்னாவின் இந்த பேச்சு, அவருக்கு எதிராக கிளம்பி
இருக்கிறது. கடவுளை பாய்பிரண்ட் என்று கூறியதால் அவருக்கு போன்
மூலமாகவும், கடிதம் மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் பலர் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர். பல தரப்பினரின் எதிர்ப்பையடுத்து தன்னுடைய
பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார் காம்னா.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் யதார்த்தமாகத்தான் சொன்னேன்.
ஆனால் இவ்வளவு பெரிய பிரச்னையாகும் என்று நினைக்கவில்லை. திருப்பதி
வெங்கடாஜலபதியை என்னுடைய தாய்-தந்தையாக, நண்பராக பார்க்கிறேன். அந்த
அர்த்தத்தில் தான் அப்படி கூறினேன். ஆனால் அது ஆங்கிலத்தில் பேசும்போது
பாய்பிரண்ட் என்றாகிவிட்டது. வெங்கடாஜலபதியை நான் என்னுடைய 5வயது முதல்
தரிசனம் செய்து வருகிறேன். அவரை தரிசித்துவிட்டு வந்தால் என் மனதில்
இருக்கும் குழப்பங்கள் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்வு பெருகும். எனக்கு
எல்லாமே அவர் தான். பாய்பிரண்ட் என்று நான் கூறிய வார்த்தை, யாருடைய
மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்
என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஏக்தா கபூர்
» உள்ளாடை போடாமல் வந்து சர்ச்சையில் சிக்கிய நீத்து சந்திரா!
» நடிகை ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கிய “நித்யானந்தா” படத்தை வெளியிட தடை: கோர்ட்டு உத்தரவு
» இலங்கை பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கிய சூர்யா, அசின் படங்கள் திரைப்பட கூட்டுக்குழுவில் முக்கிய முடிவு
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum