தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி

Go down

செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி Empty செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி

Post  oviya Thu Apr 04, 2013 9:52 am

விலைரூ.90
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 186)
ஆணும், பெண்ணும் உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் வாழ்க்கையே கற்பு வாழ்க்கை. கி.பி., 6ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் நூல்கள் செவ்வியல் இலக்கியங்கள் எனப்படுகின்றன. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியங்கள், தொல்காப்பியம், இறையனார் களவியல், முத்தொள்ளாயிரம் ஆகிய நூல்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல்களில் காணப்படும் கற்புநெறிச் செய்திகள் பதினெட்டு கட்டுரைகளாக, பதினெட்டு பேராசிரியர்களால் கருத்தரங்கில் படித்தளிக்கப்பட்டவை. அவற்றை மூவர் குழு தொகுத்து நூலாக்கியுள்ளது. "கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்று கொன்றை வேந்தன் சுட்டிக் காட்டுகிறது. கற்பெனும் திண்மை என்றார் திருவள்ளுவர். "மாசில் கற்பின் புதல்வன் தாய் என அகநானூறு பேசுகிறது. பொதுவாக கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள் கொள்ளுதல் நன்றாம். திருமணச் சடங்குகள் எப்போது ஏற்பட்டன? ஒழுக்கக் குறைபாடுகள் தோன்றியபோது ஏற்பட்டன."பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்றார் தொல்காப்பியர். சங்க இலக்கிய ஈடுபாடும், ஆராய்ச்சி நாட்டமும் உடையவர்களுக்கு பயன் தரும் நூல் இது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum