தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனக்கவலையை ஒழியுங்கள்

Go down

மனக்கவலையை ஒழியுங்கள் Empty மனக்கவலையை ஒழியுங்கள்

Post  birundha Sat Jan 19, 2013 4:43 pm

* நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து,
மெய்யறிவில் உன் மனதைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக் கொள்.
* பிறப்பிலிருந்து நான் உம்மை (ஆண்டவர்) சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மை நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.
* தொண்டைக்குள் மது செல்லும் போது இனிமையாக இருக்கும். பிறகு அது பாம்பைப் போலக் கடிக்கும்,
விரியனைப் போலத் தீண்டும்.
* ஞானமும் அறிவும் உனக்கு அவ்வா‌றே இனிமையாய் இருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும். உன் நம்பிக்கை வீண்போகாது.
* தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்
களுக்கு கெடுதல் ஏற்படுகிறது.
* மனக்கவலையை ஒழியுங்கள், உடலுக்கு கெடுதல் வராதபடி காத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவமும்
இளமையும் மறையக்கூடியதாகும்.
* தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக் கேட்டை வருவித்துக் கொள்வான்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum