காரிய சித்தி கணபதி கோயில்
Page 1 of 1
காரிய சித்தி கணபதி கோயில்
பிரம்மன் வழிபட்ட பிள்ளையாரான அருள்மிகு காரியசித்தி கணபதி தொந்தியின்றி முக்கண்ணோடு மேலிரு கரங்களில் ருத்ராட்சமும் கோடரியும் ஏந்தி கீழிரு கரங்களில் மோதகமும் தந்தமும் ஏந்தி தாமரை பீடத்தில் அமர்ந்துள்ளது போல திருவுருவச்சிலை அமைந்துள்ளது.
திருமணத் தடை உள்ளவர்கள், ஒருகிலோ பச்சரிசி, வெல்லம், அருகம்புல் படைத்து ரோஜா மாலை சாற்றி சிதறு காய் உடைத்து 16 வலம் வந்து அர்ச்சனை செய்து வழிபட திருமணத்தடை அகன்று திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள வாலீசுவரரையும் ஆனந்தவல்லியையும் வழிபட ராகு கேது சர்ப்ப தோடங்கள் அகலும்.
முருகனுக்கு வெண் சங்கு தீபம் ஏற்றி எதிரில் உள்ள திருமாலுக்குத் தயிர்சாதம் படைத்து வழிபட மாமியார் மருமகள் பிரச்சனை விலகும். உமையொருபாக கோலத்தில் உள்ள சண்டேசுவரரை வழிபடத் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். பிரதோச வழிபாடு இங்கு செய்வதால் சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோசவழிபாடு செய்வதைப் போன்று மும்மடங்கு பலன் கிடைக்கும் எனவும் தலபுராணம் கூறுகிறது.
போக்குவரத்து வசதி....
சென்னை கோயம்பேட்டிலிருந்து 58சி, 112ஏ, 112பி, 132, 133, 131ஏ, 113, 533 ஆகிய வழித்தடப் பேருந்துகள் பஞ்செட்டிக்கு செல்லுகின்றன
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காரிய சித்தி கணபதி கோயில்
» காரிய சித்தி கணபதி கோயில்
» காரிய சித்தி மந்திரங்கள்
» காரிய சித்தி தரும் மந்திரங்கள்
» சகல காரிய சித்தி தரும் சித்தர் எண்யந்திரங்கள்
» காரிய சித்தி கணபதி கோயில்
» காரிய சித்தி மந்திரங்கள்
» காரிய சித்தி தரும் மந்திரங்கள்
» சகல காரிய சித்தி தரும் சித்தர் எண்யந்திரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum