நாராயணி பிரத்தியங்கிரா தேவி கோவில்
Page 1 of 1
நாராயணி பிரத்தியங்கிரா தேவி கோவில்
ஸ்ரீரங்கம் அரங்கநாதரை மனங்குளிர தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து மேற்கே திரும்பி நடக்கத் தொடங்குகிறோம். வழுவழுக்கும் தார்ச் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்தால் செந்நிற கப்பி சாலை நம்மை வரவேற்கும். மேலும் ஒரு கிலோமீட்டர் நடந்தால் மண் வாசனையும் நம் நெஞ்சை கொள்ளை கொள்ளும்.
நாராயணி பிரத்தியங்கிரா தேவி.......... பச்சைப் பசேல் என்ற மரக்கூடங்கள் இடதுபுறம் காவிரிப் படு கையில் தழைத்தோங்கி தாலாட்டுப் பாட, வலது புறம் குலை குலையாய் காய்த்துத் தொங்கும் வாழைத் தோட்டங்கள். நடுவே அமைதியாய் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அன்னை அருள்மிகு நாராயணி பிரத்தியங்கிரா தேவி.
எண் கோண வடிவில் உள்ளது அன்னையின் விமான பீடம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், சிங்கமும் தனி மண்டபத்தில் இருக்க, எதிரே அன்னையின் அர்த்த மண்டபமும் அதைத் தொடர்ந்து கருவறையும் உள்ளன.
உருவ அமைப்பு........ கருவறையில் அன்னை அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது இடது மேல் கரத்தில் டமருவையும், வலது மேல் கரத்தில் நாக பாசத்தையும், இடது கீழ் கரத்தில் சூலத்தையும் வலது கீழ் கரத்தில் அசுரனின் தலையையும் ஏந்தி சற்றே உக்கிர உருவத்துடன் காட்சி தருகிறாள்.
27 மண்டை ஓடுகளை மாலையாய் அணிந்துள்ளாள் தேவி. அன்னை தனது வலது காலை தொங்கவிட்ட நிலையிலும், இடது காலை மடித்த படியும் அமர்ந்து இருக்கிறாள். அன்னையின் செவிகளில் பெரிய குண்டலங்கள் அலங்கரிக்க, தலையின் மேல் சப்த நாகம் படமெடுத்து ஆடுவது போலவும் அமைந்துள்ளது.
அன்னையின் நெற்றியில் சந்திரக் கலை காட்சி தருகிறது. பெரும்பாலும் ஆலயங்களில் இறைவன், இறைவியின் திருமேனிகள் கருங்கற்களில் உருவாக்கப்பட்டிருக்கும். சமயபுரம் போன்றசில ஆலயங்களில் அம்மனின் உருவம் சுதை வடிவில் அமைந்திருப்பதும் உண்மை.
ஆனால், இங்கு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நாராயணி பிரத்தியங்கிரா தேவியின் உருவ அமைப்பு அபூர்வமானது. அற்புதமானதும் கூட. ஆம். இங்கு அருள்பாலிக்கும் கருவறை அன்னையின் அத்திமரத்தால். திருமேனி முழுவதும் அத்திமரத்தால் உருவானது. எனவே, அன்னைக்கு எண்ணெய் மற்றும் பிற அபிஷேகங்கள் எதுவும் நடைபெறுவது கிடையாது.
அன்னையின் முகத்திற்கு புனுகு சட்டமும், மேனிக்கு சாம்பிராணி தைலமும் சாற்றுகிறார்கள். இப்படி சாற்றும் தைலம் நன்றாக உலர வேண்டும் என்பதற்காக, தைலம் சாற்றப்பட்டதும் நடையை மூடிவிடுவது இங்கு வழக்கமாக உள்ளது. எனவே, அன்னையை மாதத்தில் மூன்று நாட்கள் யாரும் தரிசனம் செய்ய முடியாது.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. ஆலயம் காலை 9.30 முதல் 12 வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும். காலையில் பொங்கல் நிவேத்தியமும், மலைத் தேன், பழ வகைகள் நிவேத்தியமும் தேவிக்கு நடைபெறுகிறது. அமாவாசை அன்று இங்கு நடைபெறும் நிகும்பலா யாகம் மிகவும் பிரபலம்.
சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த யாகத்தில் அய்யாவாடியில் நடப்பது போலவே நிறைய மிளகாயை யாக குண்டத்தில் கொட்டுகிறார்கள். அப்போது காரமோ, நெடியோ இம்மியளவு கூட வெளியே வராதது சிலிர்க்க வைக்கும் நிஜம். தேய்பிறை அஷ்டமியில் தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி. தீர்த்தம் வடபுறம் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆறு. தேவியின் விமானத்தில் தென்புறம் சப்த கன்னியர்களில் ஒருத்தியான சாமுண்டியும், வடபுறம் பிராம்மியும், மேல்புறம் வைஷ்ணவியும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர்.
யாக பலன்......... இங்கு நடைபெறும் பிரத்தியங்கிரா ஹோமம் எனப்படும் நிகும் பலா யாகத்தில் கலந்து கொள்வதால் மூட்டுவலி போன்ற எலும்பு வியாதிகள் நீங்கும் என்றும், எதிரிகளை பழி வாங்கும் என்றும் பகை உணர்வுகள் அடியோடு விலகும் என்றும் பரிபூர்ணமாக நம்புகின்றனர் பக்தர்கள். ஸ்ரீரங்கத்துக்கு மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலூர் ரோட்டில் நடுக்கரை என்ற இடத்தில் உள்ளது இந்த ஆலயம்.s
நாராயணி பிரத்தியங்கிரா தேவி.......... பச்சைப் பசேல் என்ற மரக்கூடங்கள் இடதுபுறம் காவிரிப் படு கையில் தழைத்தோங்கி தாலாட்டுப் பாட, வலது புறம் குலை குலையாய் காய்த்துத் தொங்கும் வாழைத் தோட்டங்கள். நடுவே அமைதியாய் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அன்னை அருள்மிகு நாராயணி பிரத்தியங்கிரா தேவி.
எண் கோண வடிவில் உள்ளது அன்னையின் விமான பீடம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், சிங்கமும் தனி மண்டபத்தில் இருக்க, எதிரே அன்னையின் அர்த்த மண்டபமும் அதைத் தொடர்ந்து கருவறையும் உள்ளன.
உருவ அமைப்பு........ கருவறையில் அன்னை அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது இடது மேல் கரத்தில் டமருவையும், வலது மேல் கரத்தில் நாக பாசத்தையும், இடது கீழ் கரத்தில் சூலத்தையும் வலது கீழ் கரத்தில் அசுரனின் தலையையும் ஏந்தி சற்றே உக்கிர உருவத்துடன் காட்சி தருகிறாள்.
27 மண்டை ஓடுகளை மாலையாய் அணிந்துள்ளாள் தேவி. அன்னை தனது வலது காலை தொங்கவிட்ட நிலையிலும், இடது காலை மடித்த படியும் அமர்ந்து இருக்கிறாள். அன்னையின் செவிகளில் பெரிய குண்டலங்கள் அலங்கரிக்க, தலையின் மேல் சப்த நாகம் படமெடுத்து ஆடுவது போலவும் அமைந்துள்ளது.
அன்னையின் நெற்றியில் சந்திரக் கலை காட்சி தருகிறது. பெரும்பாலும் ஆலயங்களில் இறைவன், இறைவியின் திருமேனிகள் கருங்கற்களில் உருவாக்கப்பட்டிருக்கும். சமயபுரம் போன்றசில ஆலயங்களில் அம்மனின் உருவம் சுதை வடிவில் அமைந்திருப்பதும் உண்மை.
ஆனால், இங்கு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நாராயணி பிரத்தியங்கிரா தேவியின் உருவ அமைப்பு அபூர்வமானது. அற்புதமானதும் கூட. ஆம். இங்கு அருள்பாலிக்கும் கருவறை அன்னையின் அத்திமரத்தால். திருமேனி முழுவதும் அத்திமரத்தால் உருவானது. எனவே, அன்னைக்கு எண்ணெய் மற்றும் பிற அபிஷேகங்கள் எதுவும் நடைபெறுவது கிடையாது.
அன்னையின் முகத்திற்கு புனுகு சட்டமும், மேனிக்கு சாம்பிராணி தைலமும் சாற்றுகிறார்கள். இப்படி சாற்றும் தைலம் நன்றாக உலர வேண்டும் என்பதற்காக, தைலம் சாற்றப்பட்டதும் நடையை மூடிவிடுவது இங்கு வழக்கமாக உள்ளது. எனவே, அன்னையை மாதத்தில் மூன்று நாட்கள் யாரும் தரிசனம் செய்ய முடியாது.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. ஆலயம் காலை 9.30 முதல் 12 வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும். காலையில் பொங்கல் நிவேத்தியமும், மலைத் தேன், பழ வகைகள் நிவேத்தியமும் தேவிக்கு நடைபெறுகிறது. அமாவாசை அன்று இங்கு நடைபெறும் நிகும்பலா யாகம் மிகவும் பிரபலம்.
சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த யாகத்தில் அய்யாவாடியில் நடப்பது போலவே நிறைய மிளகாயை யாக குண்டத்தில் கொட்டுகிறார்கள். அப்போது காரமோ, நெடியோ இம்மியளவு கூட வெளியே வராதது சிலிர்க்க வைக்கும் நிஜம். தேய்பிறை அஷ்டமியில் தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி. தீர்த்தம் வடபுறம் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆறு. தேவியின் விமானத்தில் தென்புறம் சப்த கன்னியர்களில் ஒருத்தியான சாமுண்டியும், வடபுறம் பிராம்மியும், மேல்புறம் வைஷ்ணவியும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர்.
யாக பலன்......... இங்கு நடைபெறும் பிரத்தியங்கிரா ஹோமம் எனப்படும் நிகும் பலா யாகத்தில் கலந்து கொள்வதால் மூட்டுவலி போன்ற எலும்பு வியாதிகள் நீங்கும் என்றும், எதிரிகளை பழி வாங்கும் என்றும் பகை உணர்வுகள் அடியோடு விலகும் என்றும் பரிபூர்ணமாக நம்புகின்றனர் பக்தர்கள். ஸ்ரீரங்கத்துக்கு மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலூர் ரோட்டில் நடுக்கரை என்ற இடத்தில் உள்ளது இந்த ஆலயம்.s
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» வல்வினை நீக்கும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி
» வல்வினை நீக்கும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி
» அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவில்
» வைஷ்ணவ தேவி கோவில்
» சாமுண்டி தேவி கோவில்
» வல்வினை நீக்கும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி
» அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவில்
» வைஷ்ணவ தேவி கோவில்
» சாமுண்டி தேவி கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum