தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயினார் திருக்கோவில்

Go down

நயினார் திருக்கோவில் Empty நயினார் திருக்கோவில்

Post  birundha Sat Mar 30, 2013 10:05 pm

ஸ்தல வரலாறு.....

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து 19 கி.மீ தூரத்தில் நயினார் கோவில் உள்ளது. ஒரு சமயம் தூர்வாசமுனிவர் அளித்த மாலையை இந்திரன் மரியாதையின்றி வாங்கி அதனை தன்யானையிடம் கொடுத்தான். யானை அதனை காலால் இட்டு மிதித்தது. கோபம் கொண்ட தூர்வாச முனிவர் இந்திரனை ஏழையாகும்படி சபித்தார். சாபவிமோசனத்திற்காக இந்திரன் பல தலங்களுக்கு அலைந்தான்.

மருதூர் என்ற தலத்தில் உள்ள இறைவனை வணங்கினான். இழந்துபோன செல்வங்களை எல்லாம் மீண்டும் பெற்றான். அத்தலமே திருமருதூர் என அழைக்கப்பட்டது. அதுவே இப்போதைய நாயினார் கோயிலாகும். கோவில் பிரகாரத்தில் புற்றடி உள்ளது. இந்த புற்றில் நாகராஜர் வசிக்கிறார். இவருக்கு முட்டை, பால், பழம் படைக்கின்றனர்.

குழந்தைக்கு நோய், நொடி ஏற்பட்டால், குழந்தையை ஏலம் விடும் பழக்கம் உள்ளது. ரூ.20 லிருந்து ஏலத்தொகை துவங்குகிறது. யாராவது ஒருவர் ஏலம் கேட்கிறார். அந்த குழந்தையை ஏலம் கேட்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அத்தொகையை கோவிலுக்கு கொடுத்துவிட்டு குழந்தையை பெற்று செல்லுகின்றனர்.

அதுமுதல் குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு நாகநாதரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இங்கு அம்பாள் கவுந்தர்ய நாயகி என அழைக்கப்படுகிறார். ஆடி மாதத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. ஆடி மாத விழாவில் காப்பு கட்டிய பிறகு இவ்வூரில் எந்த சுபகாரியமும் நடத்துவதில்லை.

முகத்தில் கரும்புள்ளி உள்ளவர்கள் சுவாமிக்கு அடுப்புக் கரியை காணிக்கையாக தருகிறார்கள். இதன்மூலம் நிரந்தரமாக கரும்புள்ளி வராது என்பது நம்பிக்கை உடலில் சிறுசிறு மருக்கள் உள்ளவர்கள் உப்பு, மிளகு காணிக்கையாக தருகிறார்கள். நாகநாதரை வேண்டினால் ராகு, கேது தோஷம் விலகுகிறது.

கோவிலில் உள்ள வாசுகி தீர்த்தம் மிகவும் புண்ணிய தீர்த்தம் ஆகும். ஒரு சமயம் முல்லா சாகிப் என்பவரது வாய் பேச முடியாத பெண் குழந்தை இங்குள்ள நாகநாதரை பார்த்து அல்லாஹ் நாயினார் ஆண்டவர் என்று வாய் திறந்து பேசினார். முல்லா பெருமிதத்தடன் நீரே நயினார் என்று போற்றி சிவபெருமானை வணங்கினார்.

இது முதல் நயினார் கோவில் என வழங்கப்பட்டது. ராகு, கேது தோஷமுள்ளவர்கள் ரமேசுவரம் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் அமைந்திருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும் விளக்கில் நெய்விட்டு வழிபட்டால் தோஷம் நீங்கி விடுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum