தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீநாகபுத்து மாரியம்மன் சப்த கன்னியர் திருக்கோவில்

Go down

ஸ்ரீநாகபுத்து மாரியம்மன் சப்த கன்னியர் திருக்கோவில் Empty ஸ்ரீநாகபுத்து மாரியம்மன் சப்த கன்னியர் திருக்கோவில்

Post  birundha Sat Mar 30, 2013 9:28 pm

ஸ்தல வரலாறு......

விழுப்புரம் மாவட்டம் கச்சராயப்பாளையம் ஸ்ரீநாகபுத்து மாரியம்மன் மற்றும் சப்தகன்னியர் ஆலயம் முன்பு பெரிய ஆலையமாக இருந்தது. பின்னர் ஆலயத்தில் போதிய பராமரிப்பு இன்றி ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.

நாராயண பூசாரி என்பவரின் முயற்சியால் பொதுமக்கள் நன்கொடை உதவியுடன் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக வருவதால் தற்போது அப்பகுதிக்கே காக்கும் தெய்வங்களாக ஸ்ரீநாகபுத்து மாரியம்மனையும் சப்த கன்னியரையும் வணங்கி தங்கள் நேர்த்திகடனை செலுத்தி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஆலயம் அமைந்துள்ள பகுதியில் 1995-ம் ஆண்டு நாராயணசாமி குடியிருந்து வந்தார். அவரது வீடு அருகில் ஆத்துகாரர் என்பவரின் வீடு இருந்தது. சிறு குழந்தைகள் உள்ள அந்த வீட்டில் நல்லபாம்பு இருந்தது. அந்த பாம்பினை அவர்கள் அடிக்கவில்லை. அதை நாராயணசாமி என்பவர் அடித்தார். பின்பு அதனை கொளுத்திவிட்டார்.

அதனை தொடர்ந்து ஒரு மாதம் கழித்து அந்த வீட்டில் இருந்த பழனியம்மாள் என்பவருக்கு அருள் வந்து நாராயணசாமியை பார்த்து என்னை (பாம்பை) ஏன் அடித்து விட்டாய் என கேட்டுள்ளார். அதற்கு சிறுகுழந்தைகள் உள்ள இந்த வீட்டிற்குள் ஏன் வந்தாய் என நாராயணசாமி திருப்பி கேட்டுள்ளார்.

அதற்கு சாமி ஆடிய பழனியம்மாள் நான் குடியிருந்து அருள் பாலித்த இடத்தில் ஆலயம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டதுடன் ஆலயம் கட்டுவதற்கான இடத்தையும் காண்பித்தார். தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதி கருவறையின் அருகில் 7 புற்றுகள் அங்கே காணப்படுகின்றன.

அந்த புத்துகளில் சப்த கன்னிகள் நாக வடிவில் உள்ளே குடியிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். ராகு, கேது, தோஷம் உள்ளவர்கள் மேற்கண்ட காலங்களில் ஆலய குறிப்புகளின் படி வழிபட்டால் தோஷம் விலகி வருவதாக பலர் கூறுகின்றனர். மேலும் 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்புற்றுகள் 50 அடி வரையிலான நீளமுடன் 15 அடி அகலமாகவும் இருந்து வந்ததாம்.

இதில்தான் அம்மன் நாக வடிவில் இருந்து இப்பகுதியை காத்து வந்ததாகவும் கோவிலின் அர்ச்சகர் நாராயணசாமி கூறினார். தொடர்ந்து பேசுகையில், பழனியம்மாள் ஆலயம் கட்டுவதற்காக வழங்கப்பட்ட இடம் அவரது சொந்த இடமாகவும் இருந்ததால் புதிதாக ஆலயம் கட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளுடன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

இத்திருக்கோவிலின் முக்கிய அம்சம் நாக தோஷம் விலகும் என்பதுதான். 48 நாட்கள் விரதத்துடன் விளக்கு பூஜை செய்யும் திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு திருமணம் ஆகிவிடுகிறது. திருமணம் ஆகாத ஆண்களும் இதே கோவிலில் 48 நாள் விரதத்துடன் விளக்கு பூஜை செய்து அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

குழந்தை இல்லாத தம்பதியர் இதே பூஜையுடன் 48 நாட்கள் தொட்டில் கட்டி வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மன நிம்மதி, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைக்கு நிவாரணம் பில்லி சூன்யம், அகலுதல், இவற்றிக்கு பால் அபிஷேகமும், பொங்கலை வைத்து பூஜை செய்ய வேண்டும். இவை செய்தால் தோஷம் திரும்.

இத்திருக்கோவிலுக்கு வருபவர்கள் தூய்மையான முறையில் வந்து வழிபடுவது அவரது சந்ததியருக்கும், அம்மன் அருள் கிடைக்கும். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கோமுதி நதிக்கரையின் அருகில் கச்சிராபாளைத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தோஷம் உள்ளவர்கள், குறைகள் உள்ளவர்கள் வழிபட்டு சென்றால் அனைத்து குறைகளும் தீரும். என உறுதியுடன் தெரிவித்தார் பூசாரி நராயணசாமி.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum