நாகநாதர் கோயில்
Page 1 of 1
நாகநாதர் கோயில்
ஸ்தல வரலாறு....
கேதுவுக்குரிய தலமான கீழப்பெரும் பள்ளம் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூம்புகாருக்குத் தெற்கில் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்தலத்திலிருந்து புதன் தலமான திருவெண்காடு 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பேருந்து நிற்குமிடம் தர்ம குளம். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் நாகநாதர் கோயில் மாடக் கோயில் ஆகும். இறைவன் பெயர் - நாகநாத சுவாமி. இறைவி - சௌந்தரநாயகி, தலமரம் - மூங்கில், தீர்த்தம் - நாக தீர்த்தம், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டது.
இங்கு கேதுவுக்கு முதல் பிரகாரத்தில் வலதுபுரம் தனி சன்னதி உள்ளது. கேது பகவான் தன்னுடைய பாபங்களைப் போக்கிக் கொள்ள இங்குள்ள நாகநாத ஸ்வாமியை தஞ்சம் அடைந்தார். ஈஸ்வரன் அவருக்கு பாபவிமோசனம் அளித்து கேது பகவானை அங்கேயே இருந்து கேதுவினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வரமருள அருள் செய்தார்.
வடகிழக்குப் பகுதியில் கேது மேற்குமுகமாக காட்சியளிக்கிறார். தேகம் தெய்வ வடிவிலும், தலை ஐந்து தலை நாக வடிவிலும், இருகைகளும் கூப்பிய நிலையில் கேது மேற்குநோக்கியவாறு நாகநாதரை வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார்.
இத்திருமேனி சமீப காலத்தில் புதிதாக நிறுவப்பட்டது. வாசுகி நாகம் தன்னு டைய சாபத்தைப் போக்கிக் கொண்ட தலம் இத்தலம். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டபோது உமையம்மை ஆலகாலத்தை இறையனாரின் கண்டத்தில் நிறுத்தியதும் இத்தலத்தில்தான். விநாயகர் வழிபாடு, வைடூர்யம் அணிதல், கொள்ளு தானம் செய்தல் ஆகியவைகளால் கேது தோஷம் குறையும்.
கேதுவுக்குரிய தலமான கீழப்பெரும் பள்ளம் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூம்புகாருக்குத் தெற்கில் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்தலத்திலிருந்து புதன் தலமான திருவெண்காடு 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பேருந்து நிற்குமிடம் தர்ம குளம். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் நாகநாதர் கோயில் மாடக் கோயில் ஆகும். இறைவன் பெயர் - நாகநாத சுவாமி. இறைவி - சௌந்தரநாயகி, தலமரம் - மூங்கில், தீர்த்தம் - நாக தீர்த்தம், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டது.
இங்கு கேதுவுக்கு முதல் பிரகாரத்தில் வலதுபுரம் தனி சன்னதி உள்ளது. கேது பகவான் தன்னுடைய பாபங்களைப் போக்கிக் கொள்ள இங்குள்ள நாகநாத ஸ்வாமியை தஞ்சம் அடைந்தார். ஈஸ்வரன் அவருக்கு பாபவிமோசனம் அளித்து கேது பகவானை அங்கேயே இருந்து கேதுவினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வரமருள அருள் செய்தார்.
வடகிழக்குப் பகுதியில் கேது மேற்குமுகமாக காட்சியளிக்கிறார். தேகம் தெய்வ வடிவிலும், தலை ஐந்து தலை நாக வடிவிலும், இருகைகளும் கூப்பிய நிலையில் கேது மேற்குநோக்கியவாறு நாகநாதரை வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார்.
இத்திருமேனி சமீப காலத்தில் புதிதாக நிறுவப்பட்டது. வாசுகி நாகம் தன்னு டைய சாபத்தைப் போக்கிக் கொண்ட தலம் இத்தலம். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டபோது உமையம்மை ஆலகாலத்தை இறையனாரின் கண்டத்தில் நிறுத்தியதும் இத்தலத்தில்தான். விநாயகர் வழிபாடு, வைடூர்யம் அணிதல், கொள்ளு தானம் செய்தல் ஆகியவைகளால் கேது தோஷம் குறையும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» நாகநாதர் கோயில்
» நாகநாதர் கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
» நாகநாதர் கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum