நடிகை ஹேமாஸ்ரீ கொலையில் ஆந்திர மந்திரிக்கு தொடர்பு?: செல்போன் உரையாடலில் அம்பலம்
Page 1 of 1
நடிகை ஹேமாஸ்ரீ கொலையில் ஆந்திர மந்திரிக்கு தொடர்பு?: செல்போன் உரையாடலில் அம்பலம்
கன்னட டி.வி. நடிகை ஹேமாஸ்ரீக்கும், கர்நாடக கோடீஸ்வரர் சுரேந்திர பாபுவுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சுரேந்திரபாபு வயதானவர் என்பதால் அவரை மணக்க ஹோமாஸ்ரீ விரும்பவில்லை. ஆனால் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணத்தை முடித்து விட்டனர்.
திருமணத்துக்கு பின் சுரேந்திரபாபு ஏற்கனவே திருமணமானவர் என்றும், குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் ஹேமாஸ்ரீக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சுரேந்திரபாபுவுடன் வாழ விருப்பம் இல்லை என்று போலீசில் புகார் அளித்து வந்தார். இந்த நிலையில் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூருக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கினார்கள். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மர்மமாக ஹேமாஸ்ரீ இறந்தார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹேமாஸ்ரீ மரணம் அடைந்ததாக சுரேந்திரபாபு போலீசில் கூறினார். பிணம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. டாக்டர்கள் ஹேமாஸ்ரீ, உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவர் இயற்கையாக மரணம் அடையவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஹேமாஸ்ரீக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்து இருந்ததாகவும் கூறினர். இதையடுத்து நடிகை ஹேமாஸ்ரீயை கொலை செய்ததாக சுரேந்திரபாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆராய்ந்தபோது ஹேமாஸ்ரீ கொலை செய்யப்பட்ட பின் ஆந்திர மந்திரி ஒருவருடன் சுரேந்திரபாபு பலதடவை பேசி இருப்பது தெரியவந்தது. அத்துடன் ஹேமாஸ்ரீ இருந்த காரில் காங்கிரஸ் பிரமுகர் ரவி என்பவரும் இருந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆந்திர மந்திரியிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் மந்திரி சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அனந்தபூர் பண்ணை ஊழியர்கள் அழித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மந்திரி தூண்டுதலில் போலீஸ் விசாரணைக்கும் அவர்கள் ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
திருமணத்துக்கு பின் சுரேந்திரபாபு ஏற்கனவே திருமணமானவர் என்றும், குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் ஹேமாஸ்ரீக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சுரேந்திரபாபுவுடன் வாழ விருப்பம் இல்லை என்று போலீசில் புகார் அளித்து வந்தார். இந்த நிலையில் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூருக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கினார்கள். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மர்மமாக ஹேமாஸ்ரீ இறந்தார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹேமாஸ்ரீ மரணம் அடைந்ததாக சுரேந்திரபாபு போலீசில் கூறினார். பிணம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. டாக்டர்கள் ஹேமாஸ்ரீ, உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவர் இயற்கையாக மரணம் அடையவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஹேமாஸ்ரீக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்து இருந்ததாகவும் கூறினர். இதையடுத்து நடிகை ஹேமாஸ்ரீயை கொலை செய்ததாக சுரேந்திரபாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆராய்ந்தபோது ஹேமாஸ்ரீ கொலை செய்யப்பட்ட பின் ஆந்திர மந்திரி ஒருவருடன் சுரேந்திரபாபு பலதடவை பேசி இருப்பது தெரியவந்தது. அத்துடன் ஹேமாஸ்ரீ இருந்த காரில் காங்கிரஸ் பிரமுகர் ரவி என்பவரும் இருந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆந்திர மந்திரியிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் மந்திரி சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அனந்தபூர் பண்ணை ஊழியர்கள் அழித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மந்திரி தூண்டுதலில் போலீஸ் விசாரணைக்கும் அவர்கள் ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை அஞ்சலி சென்னையில் பதுங்கலா?: அடிக்கடி தொடர்பு கொண்ட டாக்டரிடம் விசாரணை
» மந்திரிக்கு ஆபத்து
» கள்ளக்காதலரின் மனைவி கொலையில் எனக்குத் தொடர்பில்லை- நிலா
» இந்தியாவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்: பாகிஸ்தான் மந்திரிக்கு நடிகர் ஷாருக்கான் பதிலடி
» நித்தியானந்தாவைப் போல, பிரமிட் சாமியாரின் லீலைகள் தொலைக்காட்சிகளில் அம்பலம்!
» மந்திரிக்கு ஆபத்து
» கள்ளக்காதலரின் மனைவி கொலையில் எனக்குத் தொடர்பில்லை- நிலா
» இந்தியாவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்: பாகிஸ்தான் மந்திரிக்கு நடிகர் ஷாருக்கான் பதிலடி
» நித்தியானந்தாவைப் போல, பிரமிட் சாமியாரின் லீலைகள் தொலைக்காட்சிகளில் அம்பலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum