ஆடம்பரத்தை குறைத்து ஏழைகளுக்கு உதவுங்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Page 1 of 1
ஆடம்பரத்தை குறைத்து ஏழைகளுக்கு உதவுங்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின். இவரது பெயரில் தொடங்கப்பட்டுள்ள ரசிகர் மன்றத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் எல்.ஆர்.என். ஓட்டல் வளாகத்தில் நடந்தது.
மன்றத்தின் மாநில தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்று பேசினார். இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஏழை, எளிய பொதுமக்கள், மாணவர்கள் உள்பட 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நான் நடித்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ராஜேஷ், நடிகர் சந்தானம். மிக மிக முக்கியமானவர்கள் ரசிகர்களாகிய நீங்கள் தான். முதல் படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்து விட்டது.
எனவே ரசிகர் மன்றம் தொடங்க வேண்டும் என்றனர். நான் ஷாக் ஆகிவிட்டேன். சிலர் ரசிகர் மன்றங்களை மூடி வரும் நிலையில் நமக்கு ரசிகர் மன்றமா? என நினைத்தேன். அதிர்ச்சி அடைந்த நான் பிறகு பார்க்கலாம் என்றேன். ஆனால் படத்தின் 50-வது நாளில் மீண்டும் கேட்டனர். ரசிகர் மன்றம் என்றால் அரசியல் சாயம் பூசிவிடுவார்கள் என்பதால் வேண்டாம் என்று கூறி விட்டேன்.
படத்தின் 100-வது நாளில் மன்றம் தொடங்கலாம் என்றனர். 4 பேருக்கு நல்லது நடக்கும் என்றால் ரசிகர் மன்றத்தை தொடங்கலாம். இதற்கு என்னால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்வேன் என்று கூறி சம்மதம் தெரிவித்தேன்.
நான் உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். ஆடம்பரம் வேண்டாம். ஆடம்பரத்தை குறைத்து இல்லாத ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்நிகழ்ச்சி நடக்கிறது. வேறு எந்த காரணமும் இல்லை. என் தொழில் சினிமா. அதை நான் சரியாக செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மாநில பொருளாளர் ராஜா நன்றி கூறினார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக தொடர்ச்சியாக வாணவேடிக்கை நடந்தது.
மன்றத்தின் மாநில தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்று பேசினார். இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஏழை, எளிய பொதுமக்கள், மாணவர்கள் உள்பட 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நான் நடித்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ராஜேஷ், நடிகர் சந்தானம். மிக மிக முக்கியமானவர்கள் ரசிகர்களாகிய நீங்கள் தான். முதல் படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்து விட்டது.
எனவே ரசிகர் மன்றம் தொடங்க வேண்டும் என்றனர். நான் ஷாக் ஆகிவிட்டேன். சிலர் ரசிகர் மன்றங்களை மூடி வரும் நிலையில் நமக்கு ரசிகர் மன்றமா? என நினைத்தேன். அதிர்ச்சி அடைந்த நான் பிறகு பார்க்கலாம் என்றேன். ஆனால் படத்தின் 50-வது நாளில் மீண்டும் கேட்டனர். ரசிகர் மன்றம் என்றால் அரசியல் சாயம் பூசிவிடுவார்கள் என்பதால் வேண்டாம் என்று கூறி விட்டேன்.
படத்தின் 100-வது நாளில் மன்றம் தொடங்கலாம் என்றனர். 4 பேருக்கு நல்லது நடக்கும் என்றால் ரசிகர் மன்றத்தை தொடங்கலாம். இதற்கு என்னால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்வேன் என்று கூறி சம்மதம் தெரிவித்தேன்.
நான் உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். ஆடம்பரம் வேண்டாம். ஆடம்பரத்தை குறைத்து இல்லாத ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்நிகழ்ச்சி நடக்கிறது. வேறு எந்த காரணமும் இல்லை. என் தொழில் சினிமா. அதை நான் சரியாக செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மாநில பொருளாளர் ராஜா நன்றி கூறினார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக தொடர்ச்சியாக வாணவேடிக்கை நடந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏழைகள் கல்விக்கு உதவுங்கள்: சூர்யா, கார்த்தி பேச்சு
» வடிவேலுடன் நடிக்க ஆசை - உதயநிதி ஸ்டாலின்
» ஹன்சிகா-உதயநிதி ஸ்டாலின் ஸ்டில்ஸ்
» போட்டோஷூட் - பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்
» காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்!
» வடிவேலுடன் நடிக்க ஆசை - உதயநிதி ஸ்டாலின்
» ஹன்சிகா-உதயநிதி ஸ்டாலின் ஸ்டில்ஸ்
» போட்டோஷூட் - பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்
» காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum