தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆனைமலை மாசாணியம்மன் கோவில்

Go down

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் Empty ஆனைமலை மாசாணியம்மன் கோவில்

Post  birundha Fri Mar 29, 2013 4:36 pm

ஸ்தல வரலாறு....

மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் மயான சயனி என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில். மாசாணி அம்மனின் திரு உருவம் மிகவும் தனிப்பட்ட வடிவுடைய ஒன்றாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மன், 15 அடி உயரமானபொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி கொடுப்பதைக் கண்டிருப்போம்.

ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமான காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம் . நான்கு கைகளில. இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு,மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.

ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு மலர் தூவும் விழா சிறப்பாக நடைபெறும். விழாவன்று பக்தர்கள் பலவேறு நறுமண மலர்களால் அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். இந்த கோவிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இங்குள்ள நீதிக்கல்லில் மிளகாய் அரைத்து பூசினால் பக்தர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.

பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிப்படையும் போது மிளகாய் அரைத்து பூசினால் 90-வது நாளில் நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கோவில் நடை திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum