அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம்
Page 1 of 1
அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம்
இந்த கோவிலில் பாலசுப்பிரமணியர் வேல், வஜ்ரம், சக்தி என எவ்வித ஆயுதமும் இல்லாமல் காட்சி தருகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையுடன் இருப்பதால் இவரை, 'அதிகார முருகன்' என்றும் அழைக்கிறார்கள்.
காலையில் இவர் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், 'ஆண்டியர்குப்பம்' என்றழைக்கப்பட்டு, 'ஆண்டார்குப்பம்' என மருவியது. ஆளும் கோலத்தில் முருகன் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.
தல வரலாறு.........
முருகனின் பிரதான வாகனம் மயில். அறுபடை வீடுகளில் சுவாமிமலை, திருத்தணி மற்றும் சென்னை குமரன்குன்றம் ஆகிய தலங்களில் முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் மயிலுடன், சிம்ம வாகனமும் இருக்கிறது. சிம்மம், அம்பிகைக்குரிய வாகனம். தாய்க்கு உரிய வாகனத்துடன், இங்கு முருகன் அருளுகிறார்.
இந்த சிம்மம், மயிலைத் தாங்கியபடி இருப்பது மற்றொரு சிறப்பு. சித்திரை பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் தெய்வானை திருமணமும், 9ம் நாளில் வள்ளி திருமணமும் நடக்கிறது. முருகன் அவதரித்த கார்த்திகை மாதத்தில் குமார சஷ்டி விழாவின்போது லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.
மேலும் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை,தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இங்குள்ள அதிகார முருகன். இங்குள்ள விமானம் ஏகதளம். இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜருக்கு சன்னதிகள் இருக்கிறது.
நடை திறந்திருக்கும் நேரம்....
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
காலையில் இவர் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், 'ஆண்டியர்குப்பம்' என்றழைக்கப்பட்டு, 'ஆண்டார்குப்பம்' என மருவியது. ஆளும் கோலத்தில் முருகன் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.
தல வரலாறு.........
முருகனின் பிரதான வாகனம் மயில். அறுபடை வீடுகளில் சுவாமிமலை, திருத்தணி மற்றும் சென்னை குமரன்குன்றம் ஆகிய தலங்களில் முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் மயிலுடன், சிம்ம வாகனமும் இருக்கிறது. சிம்மம், அம்பிகைக்குரிய வாகனம். தாய்க்கு உரிய வாகனத்துடன், இங்கு முருகன் அருளுகிறார்.
இந்த சிம்மம், மயிலைத் தாங்கியபடி இருப்பது மற்றொரு சிறப்பு. சித்திரை பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் தெய்வானை திருமணமும், 9ம் நாளில் வள்ளி திருமணமும் நடக்கிறது. முருகன் அவதரித்த கார்த்திகை மாதத்தில் குமார சஷ்டி விழாவின்போது லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.
மேலும் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை,தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இங்குள்ள அதிகார முருகன். இங்குள்ள விமானம் ஏகதளம். இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜருக்கு சன்னதிகள் இருக்கிறது.
நடை திறந்திருக்கும் நேரம்....
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - ஆண்டார்குப்பம்
» அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - ஆண்டார்குப்பம்
» அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - ஆண்டார்குப்பம்
» அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில்
» அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - ஆண்டார்குப்பம்
» அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - ஆண்டார்குப்பம்
» அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில்
» அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum