அஜீத்திடம் கதை சொல்ல டென்ஷனான முருகதாஸ்
Page 1 of 1
அஜீத்திடம் கதை சொல்ல டென்ஷனான முருகதாஸ்
சென்னை: அஜீத்திடம் தீனா கதை சொல்ல அப்போது புதுமுக இயக்குனரான முருகதாஸ் டென்ஷனாகியுள்ளார். கடந்த 1999ம் ஆண்டில் வெளியான ஷங்கரின் முதல்வன் படத்தில் அர்ஜுன் முதல்வரான ரகுவரனை பேட்டி காணும் காட்சி படத்தின் ஹைலைட்டாக இருந்தது. ரகுவரனை பேட்டி காணும் முன்பு படபடப்பாக காணப்படும் அர்ஜுன் கழிவறைக்கு சென்றும், வாழைப்பழம் உண்டும் டென்ஷனைக் குறைப்பார். அதே போன்ற படபடப்பு அஜீத் குமாரிடம் தீனா கதை சொல்லும்போது தனக்கு இருந்ததாக ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து முருகதாஸ் கூறுகையில், முதல்வன் படத்தில் அர்ஜுன் ரகுவரனை பேட்டி காணும் முன்பு டென்ஷனைக் குறைக்க என்னவெல்லாம் செய்தாரோ அதையே நான் அஜீத் குமாரிடம் தீனா கதை சொல்லும் முன்பு செய்தேன். ஒரு வேளை ஷங்கருக்கும் ஆரம்ப காலத்தில் இது போன்ற படபடப்பு வந்திருக்குமோ, அதனால் தான் அதை தனது படத்தில் காட்சியாக்கியுள்ளாரோ என்றார். தீனா கதை சொல்லும்போது அஜீத் முன்னணி நடிகர், முருகதாஸுக்கு அது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சொந்த படம் எடுக்கிறார் அமீர்! அஜீத்திடம் பேசி வருவதாக தகவல்!!
» சொல்ல சொல்ல இனிக்கும்
» மகளுக்குச் சொல்ல
» சொல்ல மாட்டேன்
» சொல்ல மாட்டேன்
» சொல்ல சொல்ல இனிக்கும்
» மகளுக்குச் சொல்ல
» சொல்ல மாட்டேன்
» சொல்ல மாட்டேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum