காற்றினிலே வரும் கீதம்
Page 1 of 1
காற்றினிலே வரும் கீதம்
ரெட்சன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.கே.ஆனந்த் தயாரிக்கும் புதிய சின்னத்திரை தொடர், காற்றினிலே வரும் கீதம். இந்த தொடரை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கேள்வியின் நாயகனே, என் பெயர் ரங்கநாயகி, அலைகள், செல்வி போன்ற மெகா தொடர்களை இயக்கியவர். அன்னக்கிளி, கிழக்கே போகும் ரெயில், முதல் மரியாதை, அலைபாயுதே உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய ஆர்.செல்வராஜ், இந்த தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். எங்கேயும் எப்போதும் படத்தின் இசையமைப்பாளர் சத்யா இந்த தொடருக்கு இசையமைக்கிறார். காதல்மதி எழுதிய முகப்பு பாடலுக்கு பாடியவர் காயத்ரி. ஒளிப்பதிவு: ராஜா நடிகை வாணி விஸ்வநாத் முதன்முதலாக நடிக்கும் சின்னத்திரை தொடர் இது. அவருடன் சுனில், திவ்யா, ரவி நடிக்கிறார்கள். தொடருக்கான தொடக்க விழாவில் தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணசாமி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இயக்குனர்கள் மணிபாரதி, வீறாப்பு பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக விருக்கிறது, இந்த தொடர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காட்டினிலே வரும் கீதம்
» காட்டினிலே வரும் கீதம்
» காட்டினிலே வரும் கீதம்
» காட்டினிலே வரும் கீதம்
» காட்டினிலே வரும் கீதம்
» காட்டினிலே வரும் கீதம்
» காட்டினிலே வரும் கீதம்
» காட்டினிலே வரும் கீதம்
» காட்டினிலே வரும் கீதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum