பாலிவுட்டில் ஜொலிக்க இருக்கும் தமன்னாவின் பரபர பேட்டி
Page 1 of 1
பாலிவுட்டில் ஜொலிக்க இருக்கும் தமன்னாவின் பரபர பேட்டி
ஹிம்மத்வாலா என்ற பாலிவுட் படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்து வருகிறார் நடிகை தமன்னா. அது விரைவில் வெளிவர இருக்கிறது. அவருடன் நிருபர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்,
பாலிவுட்டில் உங்களுக்கு என்று தனித்துவம் வாய்ந்த படத்தை எதிர்பார்க்கின்றீர்களா?
படங்கள் மக்கள் பார்ப்பதற்காக எடுக்கப்படுகின்றன. ஒரு படத்தை அதிக அளவிலான மக்கள் பார்க்கும் பொழுது அந்த படங்களில் நடித்த எனக்கு ஒரு நடிகையாக முக்கியத்துவம் கிடைக்கிறது. எனவே உண்மையாகவே, அது போன்ற நல்ல படங்களையே நான் தேடி வருகிறேன். பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன்.
நீங்கள் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் கடைசியில் சஜித் கான் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது ஏன்?
நான் சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தேன். நான் விரும்பி பார்க்கும் படியான ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரமாக இருக்கவே நான் விரும்பினேன். ஹிம்மத்வாலா அதுபோன்ற படம். ஒரு படம் நல்ல முறையில் வெளிவர பணியாற்றுபவர்களின் படங்களையே நான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதுவே திரையில் எதிரொலிக்கிறது.
சமீபத்தில் நீங்கள் பார் டான்சர் ஆக நடிப்பது போன்ற படங்கள் வெளியாகி முரண்பாடான விசயத்தில் சிக்கியது பற்றி...
பிரபலமான நபராக நீங்கள் இருக்கும்போது அடிப்படையற்ற இது போன்ற விசயங்கள் வெளிவருவது சகஜம்தான். அதற்கு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. தற்போது நான் சமூக வலைதளம் எதிலும் தொடர்பில் இல்லை. எனது ரசிகர்களிடம் நான் ஊடகங்கள் வழியாகவே தொடர்பு கொள்கிறேன். அதிர்ஷ்டவசமாக ஊடகங்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றன.
உங்களது முதல் படம் தொடர்பாக தயாரிப்பாளர் சலீம் அக்தர் சட்ட நடவடிக்கை எடுத்ததாக வெளிவந்த செய்தி குறித்து...
சட்டப்படி அது அணுகப்பட்டு வருகிறது. அந்த படத்தில் நடித்தபோது நான் பள்ளியில் படித்து வந்தேன். அப்பொழுது மைனராகவும் நான் இருந்தேன். எனவே இது தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம் இருந்தால் அது செல்லத்தக்கது அல்ல.
சஜித்தின் படம் முற்றிலும் வேறுபட்டது என்று கூறப்படுகிற நிலையில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் இருந்து எவ்வாறு உங்கள் கதாபாத்திரம் வேறுபடுகிறது?
எனது கதாபாத்திரம் மாற்றப்படவில்லை. ஆனால் இந்த படத்தில் பல மாற்றங்கள் உள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, வர்த்தக ரீதியிலான, தியேட்டர்களில் 3 மணிநேரம் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கும் படங்களை எடுக்கவே சஜித் வழக்கமாக விரும்புவார். படத்தில் ஆடை வடிவமைப்பாளராக ரிக் ராய் மேற்கொண்டிருக்கும் பணி மகத்தானது. அது கடந்த 80களில் எடுக்கப்பட்ட படங்களை போன்றே சிறந்ததாக இருக்கும்.
அக்ஷய் குமாருடனான உங்களது படம் குறித்து...
நான் மிக பரவசமாக உள்ளேன். அந்த படத்தை ரமேஷ் டாரணி தயாரிக்கிறார். அக்ஷய் குமாரின் தீவிர ரசிகை நான். அவரை இதுவரை சந்தித்ததில்லை. என்னால் இன்னும் காத்திருக்க இயலாது.
பாலிவுட்டில் உங்களுக்கு என்று தனித்துவம் வாய்ந்த படத்தை எதிர்பார்க்கின்றீர்களா?
படங்கள் மக்கள் பார்ப்பதற்காக எடுக்கப்படுகின்றன. ஒரு படத்தை அதிக அளவிலான மக்கள் பார்க்கும் பொழுது அந்த படங்களில் நடித்த எனக்கு ஒரு நடிகையாக முக்கியத்துவம் கிடைக்கிறது. எனவே உண்மையாகவே, அது போன்ற நல்ல படங்களையே நான் தேடி வருகிறேன். பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன்.
நீங்கள் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் கடைசியில் சஜித் கான் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது ஏன்?
நான் சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தேன். நான் விரும்பி பார்க்கும் படியான ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரமாக இருக்கவே நான் விரும்பினேன். ஹிம்மத்வாலா அதுபோன்ற படம். ஒரு படம் நல்ல முறையில் வெளிவர பணியாற்றுபவர்களின் படங்களையே நான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதுவே திரையில் எதிரொலிக்கிறது.
சமீபத்தில் நீங்கள் பார் டான்சர் ஆக நடிப்பது போன்ற படங்கள் வெளியாகி முரண்பாடான விசயத்தில் சிக்கியது பற்றி...
பிரபலமான நபராக நீங்கள் இருக்கும்போது அடிப்படையற்ற இது போன்ற விசயங்கள் வெளிவருவது சகஜம்தான். அதற்கு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. தற்போது நான் சமூக வலைதளம் எதிலும் தொடர்பில் இல்லை. எனது ரசிகர்களிடம் நான் ஊடகங்கள் வழியாகவே தொடர்பு கொள்கிறேன். அதிர்ஷ்டவசமாக ஊடகங்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றன.
உங்களது முதல் படம் தொடர்பாக தயாரிப்பாளர் சலீம் அக்தர் சட்ட நடவடிக்கை எடுத்ததாக வெளிவந்த செய்தி குறித்து...
சட்டப்படி அது அணுகப்பட்டு வருகிறது. அந்த படத்தில் நடித்தபோது நான் பள்ளியில் படித்து வந்தேன். அப்பொழுது மைனராகவும் நான் இருந்தேன். எனவே இது தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம் இருந்தால் அது செல்லத்தக்கது அல்ல.
சஜித்தின் படம் முற்றிலும் வேறுபட்டது என்று கூறப்படுகிற நிலையில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் இருந்து எவ்வாறு உங்கள் கதாபாத்திரம் வேறுபடுகிறது?
எனது கதாபாத்திரம் மாற்றப்படவில்லை. ஆனால் இந்த படத்தில் பல மாற்றங்கள் உள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, வர்த்தக ரீதியிலான, தியேட்டர்களில் 3 மணிநேரம் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கும் படங்களை எடுக்கவே சஜித் வழக்கமாக விரும்புவார். படத்தில் ஆடை வடிவமைப்பாளராக ரிக் ராய் மேற்கொண்டிருக்கும் பணி மகத்தானது. அது கடந்த 80களில் எடுக்கப்பட்ட படங்களை போன்றே சிறந்ததாக இருக்கும்.
அக்ஷய் குமாருடனான உங்களது படம் குறித்து...
நான் மிக பரவசமாக உள்ளேன். அந்த படத்தை ரமேஷ் டாரணி தயாரிக்கிறார். அக்ஷய் குமாரின் தீவிர ரசிகை நான். அவரை இதுவரை சந்தித்ததில்லை. என்னால் இன்னும் காத்திருக்க இயலாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரபுதேவா ‘ஆர்டர்’… சினிமாவிலிருந்து விலகுகிறேன்! – நயன் பரபர பேட்டி
» அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!
» ரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரம் எப்படி இருக்கும் தெரியுமா? – கமல் பேட்டி
» முதல் மனைவியின் சதி! – ராஜ்கிரண் பரபர புகார்
» கோடையிலும் ஜொலிக்க...
» அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!
» ரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரம் எப்படி இருக்கும் தெரியுமா? – கமல் பேட்டி
» முதல் மனைவியின் சதி! – ராஜ்கிரண் பரபர புகார்
» கோடையிலும் ஜொலிக்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum