தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கற்குடி உய்யக்கொண்டான்

Go down

கற்குடி உய்யக்கொண்டான் Empty கற்குடி உய்யக்கொண்டான்

Post  birundha Wed Mar 27, 2013 10:05 pm

ஸ்தல வரலாறு.....

இறைவர் திருப்பெயர் : உஜ்ஜீவநாதஸ்வாமி, உச்சிநாதர், கற்பகநாதர். இறைவியார் திருப்பெயர் : அஞ்சனாட்சி, பாலாம்பிகை.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : பொன்னொளி ஓடை, குடமுருட்டி (இது தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு.), ஞானவாவி, எண்கோண தீர்த்தம், நாற்கோணதீர்த்தம் என்பன.

தற்போது மக்களால் உய்யக்கொண்டான்மலை என்று அழைக்கப்படுகிறது. இறைவன் கல்லில் மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது. இத்தலத்தில் தான் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்து இறைவன் அருள் புரிந்தார். மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.

50 அடி உயர மலையில் இந்த கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றி பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக் கிணறு, நாற்கோணக் கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. தேவி “அஞ்சனாட்சி” என வழங்கப்பெறுகிறாள். இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள்.

மற்றொரு அம்பிகை “பாலாம்பிகை” எனப்படுகிறாள். இரண்டு அம்மன்களுக்கும் தனித்தனி வழிபாடு நடக்கிறது. கோயில் மலை மேல் உள்ளது. கற்கோயில். கிழக்கு நோக்கிய முகப்பு வாயில். படிகள் மீது ஏறி மேலே செல்லும்போது இடப்பக்கம் வினாயகர் உள்ளார். மேலேறிச் சென்றால் கவசமிட்ட கொடிமரம் உள்ளது.

அதன் முன்பு மார்க்கண்டனைக் காப்பதற்காக, எமனைத்தடுப்பதற்காக கருவரை நீங்கி வந்த சுவாமியின் பாதம் உள்ளது.மலைக்கோயில் “ஓம்” வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

பிரார்த்தனை:

பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum