தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை சிவ தலங்கள்

Go down

சென்னை சிவ தலங்கள் Empty சென்னை சிவ தலங்கள்

Post  birundha Wed Mar 27, 2013 3:55 pm

சிவனுக்கு எத்தனையோ சிறப்பான கோவில்கள் உலகம் முழுவதும் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அப்படி சிறப்பு வாய்ந்த சில கோவில்கள் சென்னையிலும் இருக்கின்றன.

* ஏகாம்பரேஸ்வரர், பூங்காநகர்: 300 ஆண்டுகளுக்கு முன், ஆளங்காட்டுப் பிள்ளை என்பவருக்காக ஆங்கிலேயர்கள் அனுமதியின் பேரில் உருவான கோவில் இது.ஏகாம்பரேசுவரர், காமாட்சி அம்மன், நவக்கிரக சன்னதிகள் என்று எல்லாமே தெய்வீகமாகக் காட்சி அளிக்கின்றன.

* காசி விஸ்வநாதர், அயனாவரம்: இரண்டு குஜராத்திப் பெண்மணிகளின் முயற்சியால் உருவான கோவில் இது. காசிக்குக் கடும் பயணம் மேற்கொண்டு விஸ்வநாதனை வழிபடுவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்த பக்தர்களுக்கு தம்மை நாடியே காசி விஸ்வநாதன் வந்ததில் பரம சந்தோஷம்.

விஸ்வநாதர், விசாலாட்சி பிரதான கடவுளர்களாக அமைந்த சிறிய, அழகான கோவில். நவகிரக சன்னதி தனியாக வெளிப்பிராகாரத்தில் உள்ளது.

* கங்காதரேஸ்வரர், புரசைவாக்கம்:- பகீரதன் நிறுவிய ஆயிரத்தெட்டு சந்தன லிங்கங்களில் ஒன்று தான் இந்த கங்காதரேஸ்வரர். கோவிலின் தீர்த்தம் கங்காபவான். பகீரதன் வானிலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தாரே, அதே கங்கையின் துளிகள் தான்.

* திருவேஸ்ட்டீஸ்வரர், திருவல்லிக்கேணி: கோவிலுக்குள் நுழையும் முன் ராஜகோபுரத்தை நிமிர்ந்து பார்த்தால் ஆச்சரியத்தால் கண்கள் அகல விரியும். கோபுரத்தின் இடது பக்கத்தில், கீழே ஒரு முகமதியர் சிற்பம், பக்கத்தில், லிங்கத்தின் மீது பால் சொரியும் ஒரு பசு, பலநூறு வருடங்களுக்கு முன் திருவேட்டீஸ்வரனை லிங்க ரூபமாகக் கண்டெடுத்தவர் ஒரு முகமதியர் தானாம்.

இன்றும் கூட இரவு அர்த்தஜாம பூஜை நிவேதனத்துக்காக ஆற்காடு நவாப் வம்சத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு குடும்பத்திலிருந்து தினமும் இரவு 9 மணிக்கு பசும்பால் வந்து விடுகிறதாம்.

அழகிய பெரிய கோவில், நந்தவனம், தெப்பக்குளம் என்று கண்களுக்கும் மனதுக்கும் குளுமை பரப்பும் சிங்காரக் கோவிலாக இது உள்ளது.

* வெள்ளீஸ்வரர், மயிலாப்பூர்: மாவலி சக்கரவர்த்தியின் ஈகை பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வாமனர் அவனை அழித்து விடப் போகிறாரே என்று பரிதவித்த குருசுக்கிராச்சார்யார் வண்டாய் உருவெடுத்து தாரை வார்க்கும் கிண்டியின் மூக்குப் பகுதியை அடைத்துக் கொள்கிறார்.

இதைக் காணும் வாமனர் ஒரு குச்சியால் கிண்டித் துளையைக் குத்த சுக்ராச்சார்யார் கண்ணை இழக்கிறார். மயிலைக்கு வந்து சிவபெருமானை வேண்ட அவர் அருளால் மீண்டும் பார்வை பெறுகிறார்.

சுக்கிரனுக்கு பார்வை அளித்த இறைவன் வெள்ளீஸ்வரன். ஈஸ்வரன் தவிர இத்தலத்தின் மற்றுமோர் சிறப்பு சரபேஸ்வரர் சன்னதி. இரண்யனை அழித்த நரசிம்மரின் உக்கரத்தைக் தணித்ததாகக் கூறப்படும் இவரை ஞாயிறு ராகு காலத்தில் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

வெள்ளீஸ்வரர் அருளால் தீர்க்கமான கண்பார்வை பெறுவதோடு, கண் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் வந்து வேண்டிக் கொண்டால் சுலபமாய் சிகிச்சை முடித்து பார்வை பெறுகிறார்களாம்.

* காரணீஸ்வரர் திருக்கோவில், சைதாப்பேட்டை: எந்தக் காரணத்திற்காகவும் இந்த ஈசனை வந்து வணங்கினால் அந்தக் காரணம் எல்லாம் கனிவாக நிறைவேறும். அதனாலேயே இந்த ஈஸ்வரன், காரணீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

அம்பிகை சொர்ணாம்பிகை. தூண்களிலும், சுவர்களிலும் காரணீஸ்வரர் கருவறை மேல் விதானத்திலும் அநேக மீன் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து இக்கோயில் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம்.

கமிகா ஆகமப்படி இக்கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் போது எட்டாம் நாள் அன்று நடத்தப்படும் திருஞான சம்பந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி பக்தர்களைப் பரவசப்படுத்தும்.

குறிப்பாக கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அக்காட்சியைக் காண்பதால் பிறக்கும் குழந்தை கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் என்று நம்புகிறார்கள்.

*வேங்கீஸ்வரர், வடபழனி: வண்டு தீண்டு முன்னர் மலர் பறித்து இறைவனை பூஜிக்க விரும்பியவர் அந்த முனிவர். அதனால் பொழுது விடியும் முன்னரே மரங்களில் ஏறி பூக்களைத் தீண்டுவதில் வண்டுகளை முந்திக் கொண்டார்.

இவரது பக்தியைப் போற்றும் வகையில், அவர் பூஜை விருப்பம் நிறைவேற அவர் எளிதாக மரம் ஏற அவருக்குப் புலிக்கால்களாக மாற்றித் தந்தான் இறைவன்.

புலிக்கால் முனிவரானார் அவர் வேங்கைக் (புலி) கால் முனிவர் வழிபட்ட ஈசனாததால், மூலவர் வேங்கீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். சிவபெருமானின் திருநடனங்களைக் காண விரும்பி, அத்திரி முனிவர் அநசூயைக்கு மகனாக அவதரித்தார் ஆதிசேஷன்.

இவரும் வியாக்கிரபாதரும் சேர்ந்து சிவப்பரம் பொருளை வழிபட்ட தலம்தான் இந்த வேங்கீச்சரம். அம்மன் சாந்தநாயகி, கர்ப்பகிரகம் கஜபிருஷ்ட விமானமாகக் கட்டப்பட்டு தனிச் சிறப்புப் பெற்றுள்ளது. வேண்டும் வரமருளுகிறார் வேங்கீஸ்வரர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum