பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் கோவில்
Page 1 of 1
பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் கோவில்
ஸ்தல வரலாறு.....
சிவபெருமானின் வாகனம் நந்தி. ஆலயங்களில் சிவபெருமான் முன்பு நந்தி அமர்ந்து இருப்பது மரபு ஆகும். ஆனால் மராட்டிய மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயத்தில், சிவபெருமானுக்கு முன் நந்தி வைக்கப்படவில்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இது தான் என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் ஒரு ஆன்மிக நிகழ்வு கூறப்படுகிறது.
அதன் விவரம் வருமாறு:- ஒருமுறை இந்திர சபையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரம்மனின் 5 தலைகளில் நான்கு தலைகள் வேதங்களை சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு தலை மட்டும் சிவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டது. சிவபெருமான் கோபம் அடைந்தார். அவரது கண்கள் சிவந்தன. வெகுண்ட சிவ பெருமான், அந்தத் தலையை வெட்டி எறிந்தார். இந்த செயலால் சிவனுக்கு பிரம்ம ஹத்யா (பிராமணனை கொல்லுதல்) தோஷம் ஏற்பட்டது.
இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவதும் சுற்றினார். ஆனால், பாவ நிவர்த்திக்கு வழி தெரியவில்லை. சோமேஸ்வர் என்ற இடத்திற்கு சிவன் வந்தபோது, பசு ஒன்று தனது கன்றுடன் பேசுவதைக் கேட்டார். பிராமணன் ஒருவனை தனது கொம்பால் குத்திக் கொன்று விட்டது அந்த கன்று. இதனால் அதற்கு பிரம்ம ஹத்யா தோஷம் ஏற்பட்டது. இந்த பாவத்திற்கு ஆளான கன்றுக்கு, தாய்ப்பசு பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.
இதன்படி, பரிகாரத்திற்காக பசுங்கன்று சென்ற திசையை பின்பற்றி சிவபெருமானும் சென்றார். பஞ்சவதி அருகே வந்ததும் கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்ம ஹத்யா பாவத்தை போக்கி, பழைய நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து அதே இடத்தில் சிவனும் நீராடி தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
இந்த நிகழ்வு காரணமாகவே குறிப்பிட்ட அந்த கோவிலில் சிவன் முன்பு நந்தி இல்லை என்று கூறப்படுகிறது. நந்தியின் அருள் பெற்ற முனிவர்கள் நந்தி பெருமானின் அருள்பெற்ற 8 முனிவர்கள் வருமாறு:- 1. சனகர், 2. சனாதனர், 3. சனந்தகர், 4. சனத்குமாரர், 5. வியாக்கிரபாதர், 6. பதஞ்சலி, 7. சிவயோக முனிவர், 8. திருமூலர்
சிவபெருமானின் வாகனம் நந்தி. ஆலயங்களில் சிவபெருமான் முன்பு நந்தி அமர்ந்து இருப்பது மரபு ஆகும். ஆனால் மராட்டிய மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயத்தில், சிவபெருமானுக்கு முன் நந்தி வைக்கப்படவில்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இது தான் என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் ஒரு ஆன்மிக நிகழ்வு கூறப்படுகிறது.
அதன் விவரம் வருமாறு:- ஒருமுறை இந்திர சபையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரம்மனின் 5 தலைகளில் நான்கு தலைகள் வேதங்களை சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு தலை மட்டும் சிவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டது. சிவபெருமான் கோபம் அடைந்தார். அவரது கண்கள் சிவந்தன. வெகுண்ட சிவ பெருமான், அந்தத் தலையை வெட்டி எறிந்தார். இந்த செயலால் சிவனுக்கு பிரம்ம ஹத்யா (பிராமணனை கொல்லுதல்) தோஷம் ஏற்பட்டது.
இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவதும் சுற்றினார். ஆனால், பாவ நிவர்த்திக்கு வழி தெரியவில்லை. சோமேஸ்வர் என்ற இடத்திற்கு சிவன் வந்தபோது, பசு ஒன்று தனது கன்றுடன் பேசுவதைக் கேட்டார். பிராமணன் ஒருவனை தனது கொம்பால் குத்திக் கொன்று விட்டது அந்த கன்று. இதனால் அதற்கு பிரம்ம ஹத்யா தோஷம் ஏற்பட்டது. இந்த பாவத்திற்கு ஆளான கன்றுக்கு, தாய்ப்பசு பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.
இதன்படி, பரிகாரத்திற்காக பசுங்கன்று சென்ற திசையை பின்பற்றி சிவபெருமானும் சென்றார். பஞ்சவதி அருகே வந்ததும் கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்ம ஹத்யா பாவத்தை போக்கி, பழைய நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து அதே இடத்தில் சிவனும் நீராடி தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
இந்த நிகழ்வு காரணமாகவே குறிப்பிட்ட அந்த கோவிலில் சிவன் முன்பு நந்தி இல்லை என்று கூறப்படுகிறது. நந்தியின் அருள் பெற்ற முனிவர்கள் நந்தி பெருமானின் அருள்பெற்ற 8 முனிவர்கள் வருமாறு:- 1. சனகர், 2. சனாதனர், 3. சனந்தகர், 4. சனத்குமாரர், 5. வியாக்கிரபாதர், 6. பதஞ்சலி, 7. சிவயோக முனிவர், 8. திருமூலர்
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum