தெட்சிணா மூர்த்தி வழிபாட்டு பலன்கள்
Page 1 of 1
தெட்சிணா மூர்த்தி வழிபாட்டு பலன்கள்
சைவ சமயத்தில் அறிவுச்சுரங்கமாக கருதப்படுபவர் தெட்சிணா மூர்த்தி. இவர் ஞானத்தின் வெளிப்பாடாக கருதப்படும் அவதாரம் சரஸ்வதிக்கு அடுத்தபடியாக ஓலைச்சுவடியுடன் காட்சி தருபவரும் இவரே. தெட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் அலைபாயும் மனது கட்டுக்குள் வரும்.
தன்னை வழிபடுபவரின் சிந்தனையை அஞ்ஞானத்தில் இருந்து ஞானத்திற்கு வழிநடத்திச் செல்லும் வலிமை இவருக்கு உண்டு. வாழ்வில் எது நிலைக்கும். எது நிலைக்காது என்பதை உணர்த்தக்கூடியவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறான பாதைக்கு செல்பவர்கள் இவரை வழிபட்டால் ஒழுக்கமான நல் வாழ்வைப்பெறலாம்.
இவரை வழிபடத் துவங்கினால் வாழ்வில் அமைதி ஏற்படும். குரு பகவானுக்கு உகந்த தினமான வியாழக்கிழமை, குருவுக்கான நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மற்றும் நாள் தோறும் வரும் குரு ஒரையிலும் ( ஒரு நாளில் அந்த ஒரு மணி நேரம்) தெட்சிணாமூர்த்தியை வழிபட உகந்த காலங்களாகும்.
இவரை வழிபடுவதன் மூலம் சந்தான பாக்கியம் பெறலாம். குழந் தைகளின் படிப்பிலும் அறிவுக்கூர்மையிலும் நல்ல முன்னேற்றம் தெரியும். கொண்டைக்கடலையை மாலையாக அணிவித்தும் வெள்ளை நிற மலர்களான முல்லை மல்லிகை மலர்களால் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை அடையலாம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» தெட்சிணா மூர்த்தி வழிபாட்டு பலன்கள்
» தெட்சிணாமூர்த்தி வழிபாட்டு பலன்கள்
» தெட்சிணாமூர்த்தி வழிபாட்டு பலன்கள்
» விநாயகர் வழிபாட்டு பலன்கள்
» நவராத்திரி வழிபாட்டு பலன்கள்
» தெட்சிணாமூர்த்தி வழிபாட்டு பலன்கள்
» தெட்சிணாமூர்த்தி வழிபாட்டு பலன்கள்
» விநாயகர் வழிபாட்டு பலன்கள்
» நவராத்திரி வழிபாட்டு பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum