காளிமலை கோவில்
Page 1 of 1
காளிமலை கோவில்
ஸ்தல வரலாறு......
தென் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற புண்ணிய தலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள காளிமலை கோவிலும் ஒன்று. இங்கு சித்ரா பவுர்ணமி பொங்காலை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.
காளிமலையில் அகஸ்திய முனிவர் தவம் செய்து மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைத்ததாகவும், மார்த்தாண்டவர்ம மகாராஜாவை எட்டு வீட்டு பிள்ளைமார்கள் துரத்தி வந்த போது காளிதேவி அருள்பாலித்து மகாராஜா உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், தொடர்ந்து மகாராஜா கோவில் புனரமைப்புக்காக 600 ஏக்கர் நிலத்தை வரியில்லா பூமியாக செம்புபட்டயம் வழங்கியதாகவும், பத்து காணியின குடும்பங்களை குடியமர்த்தி கோவிலை பராமரிப்பதற்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரமுள்ள காளிமலையில் கோடை காலத்தில் வற்றாத காளிதீர்த்தம் உள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த மலை மீது நின்று பார்த்தால் நெய்யாறு, பேச்சிப்பாறை, சிற்றாறு 1, சிற்றாறு 2 ஆகிய அணைக்கட்டுகள் கண்களுக்கு ரம்மியமாக காட்சி அளிக்கும். தென்னிந்தியாவின் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலை பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறார்கள்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை நிர்மால்ய பூஜை, அலங்கார பூஜை, அஷ்டதிரவிய கணபதி ஹோமம், உஷபூஜை, எதிர்த்த பூஜை நடைபெறும். இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.
சிறப்பு....
* ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி பொங்கலிடுவதால் மலை உச்சி ஒரே புகை மூட்டமாக காணப்படும்.
* கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பெண்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு பொங்கலிடுவார்கள்.
* விழாவின் சிறப்பம்சமாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் கலந்து கொள்வார்கள்.
தென் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற புண்ணிய தலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள காளிமலை கோவிலும் ஒன்று. இங்கு சித்ரா பவுர்ணமி பொங்காலை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.
காளிமலையில் அகஸ்திய முனிவர் தவம் செய்து மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைத்ததாகவும், மார்த்தாண்டவர்ம மகாராஜாவை எட்டு வீட்டு பிள்ளைமார்கள் துரத்தி வந்த போது காளிதேவி அருள்பாலித்து மகாராஜா உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், தொடர்ந்து மகாராஜா கோவில் புனரமைப்புக்காக 600 ஏக்கர் நிலத்தை வரியில்லா பூமியாக செம்புபட்டயம் வழங்கியதாகவும், பத்து காணியின குடும்பங்களை குடியமர்த்தி கோவிலை பராமரிப்பதற்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரமுள்ள காளிமலையில் கோடை காலத்தில் வற்றாத காளிதீர்த்தம் உள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த மலை மீது நின்று பார்த்தால் நெய்யாறு, பேச்சிப்பாறை, சிற்றாறு 1, சிற்றாறு 2 ஆகிய அணைக்கட்டுகள் கண்களுக்கு ரம்மியமாக காட்சி அளிக்கும். தென்னிந்தியாவின் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலை பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறார்கள்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை நிர்மால்ய பூஜை, அலங்கார பூஜை, அஷ்டதிரவிய கணபதி ஹோமம், உஷபூஜை, எதிர்த்த பூஜை நடைபெறும். இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.
சிறப்பு....
* ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி பொங்கலிடுவதால் மலை உச்சி ஒரே புகை மூட்டமாக காணப்படும்.
* கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பெண்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு பொங்கலிடுவார்கள்.
* விழாவின் சிறப்பம்சமாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் கலந்து கொள்வார்கள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum