வியாசகாசி
Page 1 of 1
வியாசகாசி
ஸ்தல வரலாறு...
வியாச பகவான் காசி நகரம் ரொம்பக் கூட்டமாக இருப்பதைப் பார்த்தார். அதனால் அக்கரைக்குப் போய்த் தாமே ஒரு காசியை நிர்மாணித்தார். தேவர்கள் எல்லாருக்கும் இது பிடிக்கவில்லை. பக்தர்கள் இரண்டு காசிகளில் எது நிஜமான காசி என்று தெரியாமல் திகைப்பார்கள். சூரிய தேவரும், பிரம்மாவும் மற்ற தேவதைகளும் ஸ்தாபித்த லிங்கங்களின் பெருமை என்ன ஆவது? எல்லாரும் கூடி சிந்தாமணி விநாயகரைத் துதித்தார்கள்.
அவர்கள் குறை தீர்க்க விநாயகர் உறுதி அளித்தார். விநாயகர் ஒரு சிறுவனாக வியாசருடைய எதிரில் போய்த் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டார். புதிய காசியின் பெருமைகளை கேட்டு வியாசரை விநாயகர் சலிப்படைய வைத்தார். வியாசருக்குக் கோபம் வரும்படியாக ``அந்தக் காசி, இந்தக் காசி'' என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார் விநாயகர். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பொறுமை போய் கோபம் வந்தது.
என்றாலும் விநாயகர் விடவில்லை. ``அந்தக் காசியில் பிறந்தால் முக்தி என்கிறார்களே! இந்தக் காசியில் பிறந்தால் என்ன பலன் கிடைக்கும்ப'' என்று மேலும் மேலும் கேள்விகள் கேட்டு வியாசரின் ஆத்திரத்தைக் கிளறினார். பொறுமை இழந்தவர் ``கழுதைப் பிறவி கிடைக்கும்'' என்று சொல்லிவிட்டார். விநாயகர் மறைந்து போனதும் வியாசர் மிகவும் துக்கமடைந்தார்.
தன்னுடைய காசிக்கும் பெருமை வேண்டும் என்று வியாநகரைப் பிரார்த்தித்தார். ``காசிக்கு வருகின்ற அடியார்கள் எல்லோரும் வியாச காசிக்குப் போய் அவர் ஸ்தாபித்த சிவலிங்கத்தையும், தரிசித்தால் தான் காசி யாத்திரையின் பலன் கிடைக்கும்; யாத்திரை பூர்த்தியாகும்'' என்று விநாயகர் வரமளித்தார். எனவே வியாச காசிக்கு அவசியம் போக வேண்டும்.
வியாசகாசிக்கு போகாமல் திரும்பினால் காசி யாத்திரையின் பலன் கிடைக்காது. வியாச காசி கங்கையின் மறுகரையில் இருக்கிறது. படகில் போகலாம். அல்லது ராம்நகர் வழியாக போகலாம்.
வியாச பகவான் காசி நகரம் ரொம்பக் கூட்டமாக இருப்பதைப் பார்த்தார். அதனால் அக்கரைக்குப் போய்த் தாமே ஒரு காசியை நிர்மாணித்தார். தேவர்கள் எல்லாருக்கும் இது பிடிக்கவில்லை. பக்தர்கள் இரண்டு காசிகளில் எது நிஜமான காசி என்று தெரியாமல் திகைப்பார்கள். சூரிய தேவரும், பிரம்மாவும் மற்ற தேவதைகளும் ஸ்தாபித்த லிங்கங்களின் பெருமை என்ன ஆவது? எல்லாரும் கூடி சிந்தாமணி விநாயகரைத் துதித்தார்கள்.
அவர்கள் குறை தீர்க்க விநாயகர் உறுதி அளித்தார். விநாயகர் ஒரு சிறுவனாக வியாசருடைய எதிரில் போய்த் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டார். புதிய காசியின் பெருமைகளை கேட்டு வியாசரை விநாயகர் சலிப்படைய வைத்தார். வியாசருக்குக் கோபம் வரும்படியாக ``அந்தக் காசி, இந்தக் காசி'' என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார் விநாயகர். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பொறுமை போய் கோபம் வந்தது.
என்றாலும் விநாயகர் விடவில்லை. ``அந்தக் காசியில் பிறந்தால் முக்தி என்கிறார்களே! இந்தக் காசியில் பிறந்தால் என்ன பலன் கிடைக்கும்ப'' என்று மேலும் மேலும் கேள்விகள் கேட்டு வியாசரின் ஆத்திரத்தைக் கிளறினார். பொறுமை இழந்தவர் ``கழுதைப் பிறவி கிடைக்கும்'' என்று சொல்லிவிட்டார். விநாயகர் மறைந்து போனதும் வியாசர் மிகவும் துக்கமடைந்தார்.
தன்னுடைய காசிக்கும் பெருமை வேண்டும் என்று வியாநகரைப் பிரார்த்தித்தார். ``காசிக்கு வருகின்ற அடியார்கள் எல்லோரும் வியாச காசிக்குப் போய் அவர் ஸ்தாபித்த சிவலிங்கத்தையும், தரிசித்தால் தான் காசி யாத்திரையின் பலன் கிடைக்கும்; யாத்திரை பூர்த்தியாகும்'' என்று விநாயகர் வரமளித்தார். எனவே வியாச காசிக்கு அவசியம் போக வேண்டும்.
வியாசகாசிக்கு போகாமல் திரும்பினால் காசி யாத்திரையின் பலன் கிடைக்காது. வியாச காசி கங்கையின் மறுகரையில் இருக்கிறது. படகில் போகலாம். அல்லது ராம்நகர் வழியாக போகலாம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum