வடுகச்சி அம்மன் கோயில்
Page 1 of 1
வடுகச்சி அம்மன் கோயில்
ஸ்தல வரலாறு...
காதலில் எல்லாருக்கும் வெற்றி கிடைப்பது இல்லை. சாதி, மதம், அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உள்பட பல காரணங்களால் பெரும்பாலான காதல்கள் தோல்வியிலேயே முடிந்து விடுகின்றன. ஆத்மார்த்தமாக, ஆழமான காதலில் ஈடுபடுபவர்கள் மட்டுமே காதலில் வென்று கல்யாணம் வரை செல்ல போராடுவார்கள். அந்த காதல் கை கூடுவதற்குள் அவர்கள் படும்பாடு சொல்லி முடியாது.
காதலை மறக்க முடியாமல் ரத்த கண்ணீர் வடிப்பார்கள். நம் காதலுக்கு உதவ யாரும் இல்லையே என்று தவிக்கும் காதலர்கள் ஏராளமாக உள்ளனர். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை! இத்தகைய உண்மையான காதலர்களுக்கு காடனேரி வடுகச்சி அம்மம் அபாயம் அளித்து காதலை வெற்றி பெறச் செய்கிறாள்.
சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகே காடனேரியில் அமைந்துள்ள மருதூருடைய அய்யனார் கோவிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் வடுகச்சி அம்மன் தான், உண்மை காதலர்களைச் சேர்த்து வைக்கிறார். இதனால் காதலர்கள் பலர் இங்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள். இது மட்டுமின்றி, வடுகச்சி அம்மனை வந்து வழிபட்டால், கணவன்-மனைவிக்குள் உள்ள பிரச்சினை தீரும் என்றும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
சிவகங்கையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலும் காடனேரி அமைந்துள்ளது. சிவகங்கை வழியாக செல்பவர்கள் மதகுபட்டி சென்றும், காரைக்குடி வழியாக செல்பவர்கள் கல்லல், பாகனேரி வழியாக சென்றும் இந்த கோவிலை அடையலாம். அதுபோல கும்பகோணத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருசக்தி முற்றம் ஈசனும் காதல் கைகூட உதவுகிறார்.
உமையம்மை பரமசிவனை ஒரு சமயத்தில் காதலித்துத் திருமணம் புரிந்ததாகக் கூறப்படும் புராணக் குறிப்புகளில் ஈசனுக்கு தழுவக் குழந்தை நாதர் எனப் பெயர். இவர் குடியேறிக் கோவில் கொண்டமர்ந்த தலம் திருசக்தி முற்றம் கோவில் எனப்படுகிறது. இந்தத் தலத்துக்குச் சென்று வேண்டிக் கொள்பவர்களுக்குக் காதல் திருமணங்கள் கை கூடுகின்றன எனப் பல்லாண்டு கால நம்பிக்கை உள்ளது. கணவன் - மனைவி கருத்து வேறுபாடும் நீங்குவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
காதலில் எல்லாருக்கும் வெற்றி கிடைப்பது இல்லை. சாதி, மதம், அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உள்பட பல காரணங்களால் பெரும்பாலான காதல்கள் தோல்வியிலேயே முடிந்து விடுகின்றன. ஆத்மார்த்தமாக, ஆழமான காதலில் ஈடுபடுபவர்கள் மட்டுமே காதலில் வென்று கல்யாணம் வரை செல்ல போராடுவார்கள். அந்த காதல் கை கூடுவதற்குள் அவர்கள் படும்பாடு சொல்லி முடியாது.
காதலை மறக்க முடியாமல் ரத்த கண்ணீர் வடிப்பார்கள். நம் காதலுக்கு உதவ யாரும் இல்லையே என்று தவிக்கும் காதலர்கள் ஏராளமாக உள்ளனர். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை! இத்தகைய உண்மையான காதலர்களுக்கு காடனேரி வடுகச்சி அம்மம் அபாயம் அளித்து காதலை வெற்றி பெறச் செய்கிறாள்.
சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகே காடனேரியில் அமைந்துள்ள மருதூருடைய அய்யனார் கோவிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் வடுகச்சி அம்மன் தான், உண்மை காதலர்களைச் சேர்த்து வைக்கிறார். இதனால் காதலர்கள் பலர் இங்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள். இது மட்டுமின்றி, வடுகச்சி அம்மனை வந்து வழிபட்டால், கணவன்-மனைவிக்குள் உள்ள பிரச்சினை தீரும் என்றும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
சிவகங்கையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலும் காடனேரி அமைந்துள்ளது. சிவகங்கை வழியாக செல்பவர்கள் மதகுபட்டி சென்றும், காரைக்குடி வழியாக செல்பவர்கள் கல்லல், பாகனேரி வழியாக சென்றும் இந்த கோவிலை அடையலாம். அதுபோல கும்பகோணத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருசக்தி முற்றம் ஈசனும் காதல் கைகூட உதவுகிறார்.
உமையம்மை பரமசிவனை ஒரு சமயத்தில் காதலித்துத் திருமணம் புரிந்ததாகக் கூறப்படும் புராணக் குறிப்புகளில் ஈசனுக்கு தழுவக் குழந்தை நாதர் எனப் பெயர். இவர் குடியேறிக் கோவில் கொண்டமர்ந்த தலம் திருசக்தி முற்றம் கோவில் எனப்படுகிறது. இந்தத் தலத்துக்குச் சென்று வேண்டிக் கொள்பவர்களுக்குக் காதல் திருமணங்கள் கை கூடுகின்றன எனப் பல்லாண்டு கால நம்பிக்கை உள்ளது. கணவன் - மனைவி கருத்து வேறுபாடும் நீங்குவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum