வல்லடியார் கோவில்
Page 1 of 1
வல்லடியார் கோவில்
ஸ்தல வரலாறு:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடி கிராமத்தில் இருந்து கரந்தமலைக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் `வல்லடியார் கோவில்' உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், நாய்கள், பாம்புகள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. இந்த கோவிலில் சிறப்பு நிகழ்ச்சியாக புரவி (குதிரை) எடுப்பு விழா நடைபெற்று வருகிறது.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. அரமனை குதிரை, கணக்குபிள்ளை குதிரை, நேர்த்திக் கடன் குதிரைகள் என திருவிழாவில் அணிவகுத்து செல்லும். இந்த குதிரைகளை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு தோள்களில் தூக்கியப்படியே கோவிலுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இங்குள்ள வல்லடியார் பீடத்தின் முன் பகுதியில் ஒரு லிங்கம் உள்ளது.
இந்த லிங்கம், வளர்ந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. இந்த லிங்கம் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு தென்பட்டது. அப்போது வேடர் குல மக்களில் ஒருவனான குறும்பன் என்பவன் தினமும் கரந்த மலைக்கு சென்று வேட்டையாடி வந்தார். பன்றி, முயல், அணில் ஆகியவற்றை வேட்டையாடியும், காய், கனிகளை பறித்தும், கிழங்குகளை தோண்டி எடுத்தும் தனது பசியை போக்கினான்.
அப்படி ஒரு நாள், வள்ளிக்கிழங்கை தோண்டி எடுப்பதற்காக கடப்பாரையால் தரையில் குத்தினான். மீண்டும் கடப்பாரையை எடுத்தபோது, கிழங்கில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதன்பின்னர் வண்ணமிக்க பொற்கவசம் அணிந்த நிலையில், குறும்பனுக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். வல்லடியாரே லிங்கமாக தோன்றி இருக்கிறார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.
கையில் அரிவாளுடனும், முறுக்கு மீசையுடனும் காட்சி அளிக்கும் வல்லடியார் அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக காட்சி அளிக்கிறார். எந்த விலங்குகளினால் தங்களுக்கு அச்ச உணர்வு ஏற்படுகிறோ, அந்த விலங்குகளின் உருவத்தை வல்லடியார் கோவிலில் படைத்து வழிபட்டால் பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடி கிராமத்தில் இருந்து கரந்தமலைக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் `வல்லடியார் கோவில்' உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், நாய்கள், பாம்புகள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. இந்த கோவிலில் சிறப்பு நிகழ்ச்சியாக புரவி (குதிரை) எடுப்பு விழா நடைபெற்று வருகிறது.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. அரமனை குதிரை, கணக்குபிள்ளை குதிரை, நேர்த்திக் கடன் குதிரைகள் என திருவிழாவில் அணிவகுத்து செல்லும். இந்த குதிரைகளை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு தோள்களில் தூக்கியப்படியே கோவிலுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இங்குள்ள வல்லடியார் பீடத்தின் முன் பகுதியில் ஒரு லிங்கம் உள்ளது.
இந்த லிங்கம், வளர்ந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. இந்த லிங்கம் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு தென்பட்டது. அப்போது வேடர் குல மக்களில் ஒருவனான குறும்பன் என்பவன் தினமும் கரந்த மலைக்கு சென்று வேட்டையாடி வந்தார். பன்றி, முயல், அணில் ஆகியவற்றை வேட்டையாடியும், காய், கனிகளை பறித்தும், கிழங்குகளை தோண்டி எடுத்தும் தனது பசியை போக்கினான்.
அப்படி ஒரு நாள், வள்ளிக்கிழங்கை தோண்டி எடுப்பதற்காக கடப்பாரையால் தரையில் குத்தினான். மீண்டும் கடப்பாரையை எடுத்தபோது, கிழங்கில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதன்பின்னர் வண்ணமிக்க பொற்கவசம் அணிந்த நிலையில், குறும்பனுக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். வல்லடியாரே லிங்கமாக தோன்றி இருக்கிறார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.
கையில் அரிவாளுடனும், முறுக்கு மீசையுடனும் காட்சி அளிக்கும் வல்லடியார் அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக காட்சி அளிக்கிறார். எந்த விலங்குகளினால் தங்களுக்கு அச்ச உணர்வு ஏற்படுகிறோ, அந்த விலங்குகளின் உருவத்தை வல்லடியார் கோவிலில் படைத்து வழிபட்டால் பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum