தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகுடேஸ்வரர் கோவில்

Go down

மகுடேஸ்வரர் கோவில் Empty மகுடேஸ்வரர் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 1:45 am

ஸ்தல வரலாறு....

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். சிவன், பிரம்மா, விஷ்ணு ஒரே இடத்தில் அருள் பாலிக்கும் இந்த கோவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கி வரும் காவிரி இங்கு கிழக்கு நோக்கி திரும்பி செல்கிறது. காவிரி ஆற்றங்கரையில் காவிரி கண்ட விநாயகர் உள்ளார்.

இவருக்கு காவிரி நீரை எடுத்து அபிஷேகம் செய்தால் திருமணமாகாத கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணமாகும். சுயம்பு லிங்கமாக உள்ள மகுடேஸ்வரர் பாடகர்களுக்கு குரல் வளத்தை அருள்கிறார். இங்குதான் பாடகி கே.பி.சுந்தராம்பாள் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் வன்னிமரத்தடியில் உள்ள பிரம்மாவை வணங்கினால் நம் தலைஎழுத்தை மாற்றி நன்மை அருள்வார் என்று கூறப்படுவதால் கர்நாடக பக்தர்களும் வருகை தந்து பிரம்மாவை வணங்கி செல்கிறார்கள்.

கால சர்ப்பதோஷம் தீர்க்கும் கோவிலாக கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் போற்றப்படுகிறது. இங்கு திருநள்ளாறில் உள்ளது போல் சனீஸ்வரன் மேற்கு நோக்கி உள்ளார். ஆகவே, இந்த சனீஸ்வரரை வழிபட்டால் சனி தோஷ பாதிப்பு அகலும் என்று கூறப்படுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum