தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவரகுண மங்கை(நவதிருப்பதி-2)

Go down

திருவரகுண மங்கை(நவதிருப்பதி-2) Empty திருவரகுண மங்கை(நவதிருப்பதி-2)

Post  birundha Wed Mar 27, 2013 1:39 am

இத்தலம் ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இது நத்தம் என வழங்கப்படுகிறது. இது நவ திருப்பதிகளில் ஒன்றாகும்.
இது நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதி.


வேதவித் என்பவன் இத்தலத்தை அடைந்து பெருமாளை வழிபட்டு பேறு பெற்றான். அவன் ஆசண மந்திரத்தை ஜெபித்துப் பேறு பெற்றதால் பெருமாள் விஜயாசன பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

மூலவர், விஜயாசனப் பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க, கிழக்கு நோக்கி வீற்றிருக்க திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

தாயார் பெயர் வரகுணவல்லி. பகவான் பள்ளிகொண்ட கோலத்தை விட, நிற்கின்ற கோலத்தை விட, வீற்றிருக்கின்ற திருக்கோலம் சிறப்பானது. அதை இந்த தலத்திலே கண்டு களிக்கலாம்.

இது தவ பூமி, நம் தயாளர், வந்து இறங்கிய பூமி, புண்ணியம் பொலியும் பூமி, மானுடம் நாட வேண்டிய ஞான பூமி. இத்தலத்தில் வேறு நிறைய சிறப்பான சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும்.கால வெள்ளத்தில் இவைகள் அடித்து செல்லப்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

சாதாரண மனிதன் கூட இந்த தலத்தில் பெருமாளை நோக்கி தவம் செய்தால் இந்த பூலோகத்தில் சவுகரியமான வாழ்க்கையை பெறலாம். மேலோகத்திலும் பெருமாளின் கருணைக்கு பாத்திரமாகலாம் என்பதற்கு ஒரு உதாரணம் தான் இந்த அருமையான திருக்கோவில்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum