மனகவலை போக்கும் மந்திர பூமி
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
மனகவலை போக்கும் மந்திர பூமி
மனகவலை போக்கும் மந்திர பூமி
காசி-ராமேஸ்வரம் இந்துக்களுக்குப் புண்ணிய பூமி. அஜ்மீர்-நாகூர் தர்க்காக்கள் இஸ்லாமியச் சகோதரர்களுக்குப் புனிதபூமி. நாசரேத்-வேளாங்கண்ணி கிறிஸ்தவ மக்களுக்குப் பரிசுத்த பூமி. ஆனால் கோதாவரிக்கரையில் பக்கிரி சாயிபாபாவின் பாதம் பட்டு உயிர்தெழுந்து விட்ட சீரடி கிராமம் மந்திரபூமியாகி விட்டது.
அதனால் தான் எங்கெங்கோ பிறந்த பல்வேறு சமய மக்களும் பக்கிரி சாயிபாபாவின் சரணாலயத்திற்கு இளைப்பாறி ஆறுதலும் அமைதியும் பெற வந்து கொண்டே இருக்கிறார்கள். மனித சக்திகளுக்கு அப்பால் அவரிடம் ஏதாவது அமானுஷ்ய சக்தி இருந்ததா? அப்படி இருப்பதாக அவர் என்றுமே சொன்னதில்லை. அதற்கான அடையாளங்கள் கூட காட்டியதில்லை.
வசதிமிக்க ஆஸ்ரமங்களில் பாபா வாழ்ந்தாரா? இல்லை சிதைந்து போன ஒரு மசூதி தான் அவருக்கு ஆஸ்ரமம், ஆலயம் எல்லாம். பாபா புலித்தோல் அணிந்த பொன்னார்மேனியனாக விளங்கினாரா? இல்லை தலையில் கட்டுவதற்கு ஒரு கிழிந்த துண்டு, தொடையை மறைக்க இன்னொரு கந்தல் வேட்டி, அதற்கு மேல் அழுக்கை சுமக்கும் ஒரு அங்கி.
அந்த அங்கி கடைசி காலத்தில் கிடைத்த சீதனம். பாபா வேள்வியின் நாயகனாகக் காட்சி தந்ததில்லை. அவர் யார்? பூர்வீகம் என்ன? என்ற கேள்வியின் நாயகனாகவே கடைசி வரை வாழ்ந்தார். தலைக்கு வைத்துப் படுக்க ஒரு செங்கல், விரித்து உடலைக் கிடத்திட இரண்டு சணல் சாக்குகள்.
அவர் சீரடிக்கு வரும்போது கொண்டு வந்த பெட்டகங்கள் இவை தான். கடைசிவரை இந்த கஜானாக்களை அவர் கைவிடவே இல்லை. திருவோடு ஏந்தி தினசரி வீடுகளில் பிச்சை எடுத்து உண்டார், என்றாலும் அவர் மேனி தங்க மாக மின்னியது. சரி, பாபாவுக்கு வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் தெரியுமா? தெரியாது.
புராண இதிகாசக் கதைகளாவது புரியுதா? புரியாது ஏன்? அவருக்கு எழுதப்படிக்கவே தெரியாது. ஆனால் பாபாவுக்கு ஒரே வேதமந்திரம், ஒரே வரியில் தான் தெரியும். அந்த மந்திரம் இறைவன் உயர்ந்தவன் என்பதாகும். அவருடைய தொண்டர் சேனை பல்கிப் பெருகி உலகெங்கும் வியாபித்திருக்கிறது.
சாய்பாபா! எங்களோடு வாழும் இறைவன்! என்று அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். மனஉளைச்சலில் மூழ்கிய உள்ளத்திற்கு பாபா உற்சாகம் தருகிறார்.
ஓய்ந்து போய் இடறுகின்ற கால்களுக்கு உரமேற்றி ஒளி வெள்ளப் பாதை காட்டுகிறார். நாம் நினைத்ததும் காட்சி தரும் அற்புத அவதாரம் அவர். அவரை பின்பற்றினால் இந்த பிறவியில் உங்களுக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கும். அதோடு முக்தி பலமும் உண்டாகும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தோஷங்கள் போக்கும் புண்ணிய பூமி!
» பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம்
» பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம்
» மந்திர மாலிகா
» மந்திர தீட்சை
» பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம்
» பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம்
» மந்திர மாலிகா
» மந்திர தீட்சை
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum