தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மயிலிறகு மனசு

Go down

மயிலிறகு மனசு Empty மயிலிறகு மனசு

Post  meenu Tue Mar 26, 2013 2:40 pm

கவிதை எழுதுவதில் புகழ் பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன், உரைநடையில் எழுதியுள்ள நூல் இது. த. சுமதி என்ற இயற்பெயர் கொண்ட தமிழச்சி, ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்தவர். அவருடைய நட்பு வட்டம் பெரியது. இப்புத்தகத்தில், தன் மனதை தொட்டவர்கள் பற்றி எழுதியிருக்கிறார். அவர்களில் நடிகை ரோகிணி மட்டும் எல்லோருக்கும் தெரிந்தவர். மற்றவர்கள் பல துறைகளை சேர்ந்தவர்கள். இதில் உள்ள கட்டுரைகள் நம் மனதை தொடுகின்றன என்றால் அதற்கு காரணம் தமிழச்சி கையாண்டுள்ள நடை. அழகிய வார்த்தைகளை சரம் கோர்த்து, மயில் இறகால் வருடி கொடுப்பது போன்ற மென்மையான நடையில் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதனால், வேலைக்கார சிறுமியின் கொலுசு பற்றி அவர் எழுதுவதையும் நம்மால் ரசித்து படிக்க முடிகிறது. புத்தகம் முழுவதும் வண்ணத்தில் அச்சாகியிருப்பதால், கண்களுக்கும் விருந்து.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum