சுயமரியாதை சுயமரியாதை
Page 1 of 1
சுயமரியாதை சுயமரியாதை
இவர் தான் பெரியார் வரலாற்று தொடரில் 3-வது புத்தகம் தான் இந்த சுயமரியாதை. தந்தை பெரியாருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பேராசிரியர் ம. நன்னன் இப்புத்தகத்தை தொகுத்து வெளியிட்டு உள்ளார்.
தந்தை பெரியாரின் பேச்சுக்கள், குடியரசு பத்திரிகையில் வந்த தலையங்கங்கள், திராவிட இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சுயமரியாதை இயக்கம் பற்றிய விளக்கங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
கடலூர் மாவட்டம் வட்டக்காவனூரை சேர்ந்த நன்னனின் இயற்பெயர் திருஞானசம்பந்தன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் பயின்ற போது நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தனது பெயரையே மாற்றிக்கொண்டவர். பின்னர் பெரியாரின் விருப்பத்துக்கு இணங்க ஈரோட்டில் பெரியாரின் இல்லத்திலேயே தங்கி இயக்க பணிகளில் ஈடுபட்டவர். அதன்பிறகு தான் தமிழ் ஆசிரியர் பணிக்கு சென்றார்.
இப்புத்தகத்தின் அடுத்த பகுதி 4. இந்தி என்ற பெயரில் ஏற்கனவே வெளிவந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum