தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீரடியில் பிரயாகை

Go down

சீரடியில் பிரயாகை Empty சீரடியில் பிரயாகை

Post  amma Fri Jan 11, 2013 1:05 pm


சீரடியில் பிரயாகை

கங்கையும், யமுனையும் சேருமிடம் புனிதத்துவம் பிரயாகை. அங்கு போய் குளிப்பதால் புண்ணியம் சேரும் என்பது இந்துக்களின் மிகுந்த நம்பிக்கை. ஒரு குறிப்பிட்ட தினங்களில் பிரயாகையில் மக்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காதிருக்கும். சாயிபாபாவின் தீவிர பக்தர் தாஸ்கணு என்பவர். அவருக்கு நீண்ட நாள் ஆசை.

பிரயாகைக்குச் சென்று குளிக்க வேண்டு என்பது. இரவும் பகலும் கற்பனையிலேயே பிரயாகையில் நீராவடுவது போல் எண்ணி மனத்தில் ஏக்கத்துடன் இருந்து வந்தார். ஆகவே ஒரு நாள் பாபாவிடம் சென்று பிரயாகையில் தாம் குளிக்க வேண்டும் என்னும் தம் விருப்பத்தைக் கூறினார்.

அங்கு சென்று வர தங்கள் ஆசியும் அருளும் வேண்டும் என்றார் தாஸ்கணு. அவரிடம் சாபிபாபா சீரடியில் கங்கையும் யமுனையும் இணையும் பிரயாகை உள்ளதே. அவ்வாறு உள்ள போது ஏன் நேரம், காலம், அனைத்தையும் செலவு செய்து நீண்ட தூரம் போகவேண்டும்? அதற்கு அவசியமில்லை.

எல்லாம் அனாவசியம் என்சொல்லில் நம்பிக்கை வை. இங்கு இப்பொழுதே பிரயாகையைக் காணலாம் என்று உறுதியாகக் கூறினார். சாயிராம் மீது முழு நம்பிக்கையுடன் தாஸ்கணு அவரின் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்தபோது பாபாவின் பாதங்களின் அடியில் நீர் பெருக்கு எடுத்து ஓடியது. மக்கள் அனைவரும் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். சீரடியில் பிரயாகையைத் தரிசனம் செய்த பாக்கியம் பெற்றார் தாஸ்கணு. பிறவிப்பயனை பெற்றார் அவர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum